வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்து விட்டடோம்

வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்து விட்டதாகவும், அங்கு மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றியை இலக்காக நிர்ணயித்து ள்ளதாகவும் பாஜக பொதுச் செயலாளர் ராம்மாதவ் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பாஜகவின் பொதுச்செயலாளரும் வடகிழக்கு மாநிலங்களின் பாஜக பொறுப்பாளருமான ராம்மாதவ் செவ்வாய்கிழமை நள்ளிரவு வரை பிராந்திய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து, வட கிழக்கு மாநிலங்களில் உள்ள அசோம் கண பரிஷத் (ஏஜிபி), போடோலாந்து மக்கள்முன்னணி (பிபிஎஃப்), திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி கட்சி (ஐபிஎஃப்டி), தேசிய மக்கள் கட்சி (என்பிபி), தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பாஜகவின் கூட்டணிகளை உறுதிசெய்தார்.

இதுகுறித்து, ராம் மாதவ் தனது பேஸ்புக் பதிவில், “வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள 25 தொகுதிகளில் 22 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றிபெறும் திறன் இந்த கூட்டணிக்கு உள்ளது. மேலும், மோடியை மீண்டும் பிரதமராக பார்ப்பதற்கு இந்த கூட்டணி மிக முக்கியமான பங்கை வகிக்கும்.

நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதியாக பாஜக மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் அனைத்து பிரதான கட்சிகளுக்கிடையிலான தேர்தல்புரிந்துணர்வு மற்றும் கூட்டணி உறுதியானது.

அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக, என்பிபி, என்டிபிபி, ஏஜிபி மற்றும் பிபிஎஃப் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியை வீழத்தும் நோக்கத்தில் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளது. திரிபுராவில் பாஜக, ஐபிஎஃப்டி கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

சிக்கிமில் பிரதான எதிர்க் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடவுள்ளது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...