கேரளாவில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளில் போட்டி

கேரளாவில் கூட்டணி அமைத் துள்ள பாஜக, 14 தொகுதிகளில் போட்டிடுவதாக அறிவித்துள்ளது. 

கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்கூட்டணி 12 இடங்களிலும், இடதுமுன்னணி 8 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடும்போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி தனது கூட்டணியை இறுதிசெய்துள்ளது. பாஜக கூட்டணியில் பாரத் தர்ம ஜன சேனாவுக்கு (பிடிஜேஎஸ்) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் கட்சிக்கு ஒருதொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் பாஜக போட்டியிடும் என்று கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

மிசோரம் முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் பாஜக சார்பில் திருவனந்த புரத்தில், காங்கிரஸ் கட்சியின் சசி தரூரை எதிர்த்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வையநாடு, திரிச்சூர், இடுக்கி, ஆலத்துர் மற்றும் மாவிலிக்கரா ஆகியதொகுதிகளில் பிடிஜேஎஸ் போட்டியிடுகிறது. கொட்டியம் தொகுதியில் கேரள காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாஜக தனது வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...