தேசத்துக்கு எதிரான அனைத்துசக்திகளும் சிறைக்கு தள்ளப்படுவது உறுதி

ராகுலைப்போல சிலமாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை தேவைப்படாமல், அயராது மக்கள்பணியில் ஈடுபட்டு வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய  தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தில் உள்ள சீதாமரி-சரன் லோக் சபா தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு  அமித் ஷா பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் வித்தியாசம் உண்டு.  ராகுலுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட சிலமாத இடைவெளியிலும் விடுமுறை தேவைப்படுகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக அயராது தொடர்ந்து மக்கள்பணியில் ஈடுபட்டு வருகிறார் மோடி.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் ஆட்சியில் இருந்தபோது முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வுகாண  உருப்படியான நடவடிக்கைகள் எதையும் எடுத்ததில்லை. குறிப்பாக, பயங்கர வாதத்துக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொள்ள வில்லை. மேலும், பின் தங்கிய வகுப்பினர் மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவில் உள்ள ஏழைகளுக்கு ஆதரவான எந்தஉறுதியான நடவடிக்கையையும் காங்கிரஸ்கட்சி மேற்கொள்ளவில்லை.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவவீரர் லான்ஸ் நாயக் ஹெம்ராஜை பாகிஸ்தான் ராணுவம் தலையை துண்டித்துகொன்றது.  இது சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு இதற்கு போதுமான பதிலடி நடவடிக்கைகளை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. ஆனால், பாஜகஆட்சியில் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது, துல்லியத்தாக்குதல்  மூலமாக தகுந்த பதிலடி தரப்பட்டது.

அதேபோன்று, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, 56- அங்குல மார்பளவை கொண்ட நமது பிரதமர் வான் வழிமூலம் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பயங்கரவாதமுகாம்களை அழித்துக்காட்டினார். பாஜக ஆட்சியில் தேசத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் சிறைக்குபின்னால் தள்ளப்படுவது உறுதி என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...