மேற்கு வங்க சம்பவங்கள் அவசர நிலையை நினைவூட்டுகிறது

பாஜகவை சேர்ந்த இளம்பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம், மேற்குவங்கத்தில், அவசரகால நிலையை நினைவூட்டுகிறது” என்று பாஜக தலைவர் குற்றம்சாட்டி இருக்கிறார். மேற்குவங்கத்தில் லோக்சபா தேர்தல் உச்சக் கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. மெட்காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான ஆடை மற்றும் ஒப்பனையுடன் வந்த நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி படத்தை கேலிக்குரியதாக போட்டு பாஜக வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஹவுரா மாவட்ட பாஜக இளையோர் அணி நிர்வாகியாக செயல்படும் பிரியங்கா சர்மா என்பவர் மார்ஃபிங் செய்யப்பட்ட மம்தாவின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததாக திரிணாமுல் கட்சியை சேர்ந்த விபாஸ் ஹஸ்ரா என்பவர் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பிரியங்காசர்மாவை அதிரடியாக கைது சிறையில் அடைத்தனர். இந்தசம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக தலைவரும், அசாம்மாநில அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா கைது செய்யப்பட்ட பிரியங்கா சர்மாவை சிறையில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,” பாஜக நிர்வாகி பிரியங்காசர்மா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்கள் அவசரகால நிலையை நினைவூட்டுவதாக உள்ளது. பிரதமர் மோடியை பற்றி சமூக ஊடகங்களில் பலமோசமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், ஒருமுதல்வரின் படத்தை பகிர்ந்ததற்காக இளம் பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் படத்தை பகிர்வது குற்றமா? இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், மேற்குவங்கத்தில் அவசரநிலை உள்ளதாக மக்கள் கருதலாம்.

நெருக்கடி நிலை இருந்தபோது, தனக்கு எதிராக எழுதியவர்களை இந்திராகாந்தி கூட ஜெயிலில் போட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இந்தவிவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக இருக்கிறோம். நீதிமன்றம் நிச்சயம் நல்லதீர்ப்பை வழங்கும் என்று கருதுகிறேன்.

இதுதொடர்ந்தால் பேச்சுரிமை என்பதே இருக்காது,” என்று கூறி இருக்கிறார். இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் பிரியங்கா சர்மா கைது நடவடிக்கை குறித்து மனு இன்று தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தவிவகாரம் மேற்குவங்க அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அண்மையில் மம்தாவின் பிரச்சார வாகனம் சென்றபோது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்ட பாஜக தொண்டர்கள் மூன்றுபேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது முதல்வர் மம்தாவின் கேலிக்குரிய படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பாஜகவின் இளம்பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...