ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பா.ஜ.க  சார்பில் ‘எல்லா இடத்திலும் பா.ஜனதா; எல்லோர் இடத்திலும் பா.ஜனதா’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் உறுப்பினர்சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மத்திய சட்டம் மற்றும் தகவல்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். மேலும், உறுப்பினர் சேர்க்கை பிரசார வாகனத்தையும் தொடங்கிவைத்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் 8980808080 என்ற எண்ணை அழுத்தி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார்.

நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது, “பா.ஜனதா 11 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே பெரியகட்சியாக விளங்குகிறது. பா.ஜனதாவில் சாதாரண தொண்டர்கள்கூட தலைவர்கள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும் என்பது இல்லை. தமிழகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் உதிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கூட அவர்களுக்குதான் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நடந்துமுடிந்த தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா பின்னடைவை சந்தித்தது. இந்தபின்னடைவை பின்னுக்கு தள்ளி உறுப்பினர் சேர்க்கையின் மூலம் வரும்காலத்தில் தமிழகத்தில் பாஜனதாவை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசிய தாவது:-
பா.ஜனதா தொண்டர்களின் கட்சி. ஒருகுடும்பத்துக்கு சொந்தமான கட்சி அல்ல. அமித்ஷா, நிதின் கட்காரி, ராஜ்நாத்சிங், நான் (ரவிசங்கர் பிரசாத்) உள்பட அனைவரும் சாதாரண தொண்டர்களாக இருந்து இந்த அளவிற்கு தலைவர்களாக உயர்ந்துள்ளோம். பிறகட்சியினருக்கு அவரவர் குடும்பத்தினரே பிரதானம். பா.ஜனதாவில் 75 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மக்கள் பங்கெடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு வெற்றிபெற்று தந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே போலீசாரை ஏவி அடக்கு முறையை கையாளுகிறார் மம்தா பானர்ஜி. ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை கோஷம். அதனை அடக்கமுடியாது. விரைவில் கேரளாவில் பா.ஜ.க வெற்றிபெற போகிறது. தமிழகத்திலும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது போன்று தாமரை மலர்ந்தேதீரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...