ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பா.ஜ.க  சார்பில் ‘எல்லா இடத்திலும் பா.ஜனதா; எல்லோர் இடத்திலும் பா.ஜனதா’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் உறுப்பினர்சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மத்திய சட்டம் மற்றும் தகவல்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். மேலும், உறுப்பினர் சேர்க்கை பிரசார வாகனத்தையும் தொடங்கிவைத்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் 8980808080 என்ற எண்ணை அழுத்தி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார்.

நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது, “பா.ஜனதா 11 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே பெரியகட்சியாக விளங்குகிறது. பா.ஜனதாவில் சாதாரண தொண்டர்கள்கூட தலைவர்கள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும் என்பது இல்லை. தமிழகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் உதிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கூட அவர்களுக்குதான் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நடந்துமுடிந்த தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா பின்னடைவை சந்தித்தது. இந்தபின்னடைவை பின்னுக்கு தள்ளி உறுப்பினர் சேர்க்கையின் மூலம் வரும்காலத்தில் தமிழகத்தில் பாஜனதாவை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசிய தாவது:-
பா.ஜனதா தொண்டர்களின் கட்சி. ஒருகுடும்பத்துக்கு சொந்தமான கட்சி அல்ல. அமித்ஷா, நிதின் கட்காரி, ராஜ்நாத்சிங், நான் (ரவிசங்கர் பிரசாத்) உள்பட அனைவரும் சாதாரண தொண்டர்களாக இருந்து இந்த அளவிற்கு தலைவர்களாக உயர்ந்துள்ளோம். பிறகட்சியினருக்கு அவரவர் குடும்பத்தினரே பிரதானம். பா.ஜனதாவில் 75 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மக்கள் பங்கெடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு வெற்றிபெற்று தந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே போலீசாரை ஏவி அடக்கு முறையை கையாளுகிறார் மம்தா பானர்ஜி. ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை கோஷம். அதனை அடக்கமுடியாது. விரைவில் கேரளாவில் பா.ஜ.க வெற்றிபெற போகிறது. தமிழகத்திலும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது போன்று தாமரை மலர்ந்தேதீரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...