விண்வெளி யுத்தத்தில் இந்திய படையினர்

விண்வெளியில் இருந்தபடியே எதிரிநாட்டு ராணுவ நிலைகள் தகவல்தொடர்பு செயற்கைகோள்கள், வழிகாட்டும்  செயற்கைகோள்கள் உள்ளிட்டவை அளிக்கும் ஆயுத உற்பத்தியில் சீனா ஈடுபட்டுவருகிறது. பூமியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மூலம் செயற்கைகோள்களை அழிக்கும் வல்லமையும் விண்வெளியில் இருந்தபடியே லேசர் மற்றும் மின்காந்த அலைகளைவீசி எதிரிநாட்டு இலக்குகளை அழிக்கும் நிலையும் சீனாவின் வசம் உள்ளது.

இந்நிலையில் இந்தியா தனது பாதுகாப்பிற்காவும், ராணுவ பயன் பாட்டிற்காகவும் பல செயற்கை கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைகோள்களை பாதுகாப்பதற்காகவும் விண்வெளியில் இருந்து நாட்டின் நிலைகளின் மீது தாக்குதல் நடைபெற்றால்  அதனை முறியடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புத் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி மிஷன்சக்தி என்ற பெயரில் பாதுகாப்புத் துறை சார்பில் விண்வெளி தாக்குதல் ஒத்திகை இந்தியா நடத்தியது. இதில் பூமியில் இருந்து 283 கி.மீ. உயரத்தில் பறந்த 740 கிலோ எடைகொண்ட இந்தியாவின் மைக்ரோசாட்- ஆர் என்ற செயற்கைகோள் ஏவுகணையால் தாக்கி அழிக்கப்பட்டது.

இதேபோன்று விண்வெளி யுத்தபயிற்சி மேற்கொள்ள முப்படைகளுக்கும் பிரதமர் மோடி உதகரவிட்டுள்ளார். இண்ட்விண்வெளி பயிற்சி என்ற பெயரில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த யுத்தபயிற்சியில் முப்படையினர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அனைத்து பாதுகாப்பு துறை அமைப்புகள் நாட்டின் மிகமுக்கிய ஐ.ஐ.டி. அமைப்பின் ஆய்வாளர்கள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தபயிற்சியின் போது விண்வெளி யுத்தத்தில் இந்திய படையினரின் திறன் சோதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் அச்சோதனையில் யுத்த குறைபாடுகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். திறன்மேம்படுத்தவும், குறைபாடுகளை களையவும் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

விண்வெளியில் உள்ள நாட்டின் அரியசொத்துக்களை காக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிது. எதிரிகளால் விண்வெளியில் இருந்து ஏற்படும் ஆபத்தில் இருந்து நாட்டைகாக்கவும், என்னென்ன செய்யவேண்டும் என்று 2 நாட்கள் யுத்தபயிற்சியின் போது முப்படையினரும் பயிற்சி எடுக்க உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...