காஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவிரம்

காஷ்மீரில் பா.,ஜனதா மற்றும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருந்தன.

மெகபூபா முதல்மந்திரியாக இருந்து நடத்திய அந்த ஆட்சி 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை நடந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மெகபூபாவுக்கு கொடுத்துவந்த ஆதரவை பாஜக. வாபஸ்பெற்றது . இதைத்தொடர்ந்து ஆட்சிகவிழ்ந்ததால் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி ஆட்சி கடந்த ஓராண்டாக நீடித்துவரும் நிலையில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி மிக தீவிரமாக நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டில் முக்கிய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லபட்டனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மராட்டியம், ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களில் சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. அப்போது காஷ்மீர் மாநிலத்துக்கும் சேர்த்து தேர்தல்நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் சட்டசபை தேர்தலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே காஷ்மீரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தற்போது 25 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த ஓராண்டில் அம்மாநிலத்தில் பாஜக. செல்வாக்கு மிக கணிசமாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா பதிலடிதாக்குதல் நடத்தியதை காஷ்மீர் மக்கள் வரவேற்றுள்ளனர்.

எனவே இந்த தடவை அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கவேண்டும் என்பதில் பாஜக. மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்காக பாஜக புதிய வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது.

அதன் ஒருபகுதியாக நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் பாஜக. மூத்த தலைவர்களும் காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது பா.ஜ.க. ஆட்சியை உருவாக்க காஷ்மீரில் என்னென்னசெய்வது என்பது பற்றி முடிவுசெய்யப்படும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...