காஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவிரம்

காஷ்மீரில் பா.,ஜனதா மற்றும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருந்தன.

மெகபூபா முதல்மந்திரியாக இருந்து நடத்திய அந்த ஆட்சி 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை நடந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மெகபூபாவுக்கு கொடுத்துவந்த ஆதரவை பாஜக. வாபஸ்பெற்றது . இதைத்தொடர்ந்து ஆட்சிகவிழ்ந்ததால் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி ஆட்சி கடந்த ஓராண்டாக நீடித்துவரும் நிலையில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி மிக தீவிரமாக நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டில் முக்கிய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லபட்டனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மராட்டியம், ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களில் சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. அப்போது காஷ்மீர் மாநிலத்துக்கும் சேர்த்து தேர்தல்நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் சட்டசபை தேர்தலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே காஷ்மீரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தற்போது 25 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த ஓராண்டில் அம்மாநிலத்தில் பாஜக. செல்வாக்கு மிக கணிசமாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா பதிலடிதாக்குதல் நடத்தியதை காஷ்மீர் மக்கள் வரவேற்றுள்ளனர்.

எனவே இந்த தடவை அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கவேண்டும் என்பதில் பாஜக. மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்காக பாஜக புதிய வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது.

அதன் ஒருபகுதியாக நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் பாஜக. மூத்த தலைவர்களும் காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது பா.ஜ.க. ஆட்சியை உருவாக்க காஷ்மீரில் என்னென்னசெய்வது என்பது பற்றி முடிவுசெய்யப்படும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...