நாட்டு பற்றும் ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்

ஜம்மு-காஷ்மீரத்துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நிலைப்பாடு தேர்தல் வாக்குறுதியாக பாரதிய ஜனதாவால் இன்றுநேற்றல்ல, 1980-இல் அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோதே  கூறப்பட்டது.  எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான்  ஆட்சிக்கு வருகிறது என்பதை உணர்ந்தால், நரேந்திர மோடி அரசின் இந்த முடிவில்  தவறுகாண முடியாது.

கடந்த 70 ஆண்டுகாலமாக 370, 35 (ஏ) சட்டப் பிரிவு ஜம்மு-காஷ்மீரத்தின் அமைதிக்கோ, வளர்ச்சிக்கோ எந்தவிதத்திலும்  உதவவில்லை எனும் நிலையில், அவை மறு பரிசீலனை செய்யப்படுவதிலும், அகற்றப்படுவதிலும் தவறில்லை. எந்தவொருசட்டமும் காலமாற்றத்துக்கும், தேவைக்கும் ஏற்ப திருத்தப்படுவது தவிர்க்க முடியாதது.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் சந்தர்ப்பவாத அரசியல் குடும்பங்களான அப்துல்லாக்களும், முஃப்திகளும், பிரிவினைவாதத் தலைவர்களும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு, இந்தியாவின் ஏனைய பகுதியில் வாழ்பவர்களின் வரிவருவாய் பயன்படுகிறது என்பதை எத்தனை காலம்தான் சகித்துக்கொண்டிருப்பது? தங்களது குழந்தைகளை லண்டனிலும், நியூயார்க்கிலும் படிப்பதற்கு அனுப்பிவிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள அப்பாவி இளைஞர்கள் கல்லெறிந்து போராட்டம் நடத்தவும், கல்வியைப் புறக்கணிக்கவும் அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும்  தூண்டிவிடுவதற்கு என்றைக்காவது ஒரு நாள், யாராவது முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு அதைத்தான் செய்திருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது ஒரு சிறிய பகுதிதானே தவிர, மொத்த மாநிலமும்  அல்ல. 22 மாவட்டங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு என்கிற பகுதி  மூன்றரை மாவட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது.  ஆனால், 35 (ஏ) சட்டப்பிரிவின்படி நிரந்தரக் குடிமக்களாக அவர்கள் கருதப்பட்டு அந்தப் பகுதியில் அவர்கள் மட்டுமே அசையாசொத்து வைத்திருக்க முடியும், அரசு வேலை வாய்ப்புப் பெறமுடியும், கல்லூரியில் படிக்கமுடியும் என்று  சொன்னால்,  அது  எந்த விதத்தில் நியாயம்?
காஷ்மீரிகளை  இந்திய ராணுவத்தில் சேர்த்துக்கொள்வது அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்று காஷ்மீர் ஒப்பந்தத்தின்போது பிடிவாதம் பிடித்த ஷேக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் காவல் துறையில் காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு இடம்கிடையாது என்று தடுத்த கதை எத்தனை பேருக்குத் தெரியும்?.

2002-இல் சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி ஃபரூக் அப்துல்லா மாநில அரசமைப்புச் சட்டத்தில் ஒருதிருத்தம் கொண்டு வந்தார். அதன்படி 2026 வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எந்தவிதத்தொகுதி சீரமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனால், 87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் அவையில் வெறும் மூன்றரை மாவட்டங்கள் மட்டுமே உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 46 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்தைக் கேலிப் பொருளாக்கி, தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த அப்துல்லாக்களுக்கும், முஃப்திகளுக்கும்  இப்போதைய முடிவு, முடிவு கட்டும்.

ஜவாஹர்லால் நேரு என்கிற தனி மனிதரின் பிடிவாதத்தால்தான் 370, 35(ஏ) சட்டப் பிரிவுகள் அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டன. அன்றைய அரசியல்சாசன வரைவுக் குழுவின் தலைவரும் சட்ட அமைச்சருமாக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர் இந்தப் பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைக்க மறுத்தார். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல், அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்காரின் உதவியுடன் காஷ்மீர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவும், 370, 35 (ஏ) சட்டப்பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைக்கவும்  வற்புறுத்தி வெற்றிகண்டார் என்பது வரலாறு.

நீங்கள் உங்கள் எல்லைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்கிறீர்கள். உங்கள் பகுதிகளில் நாங்கள் சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்கிறீர்கள். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு நிகரான அந்தஸ்தை காஷ்மீர் பெறவேண்டும் என்கிறீர்கள். அதே நேரத்தில், இந்திய அரசுக்கு உங்கள் பகுதியில் எந்தவித அதிகாரமும் இருக்கக்கூடாது, இந்தியமக்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இருக்கக்கூடாது என்று வற்புறுத்துகிறீர்கள். இதற்கு நான் ஒத்துக்கொண்டால், இந்தியாவுக்கு துரோகம் இழைத்தவனாக நான் கருதப்படுவேன். இந்தியாவின் சட்ட அமைச்சர் என்கிற முறையில் அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று ஷேக் அப்துல்லாவின் முகத்துக்கு நேரேசொன்னவர் பாபா சாகேப் அம்பேத்கர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேற்றம் ஏற்பட்டு அந்த இனம் அழிந்து விடும் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களைப் போலவே சம உரிமைபெற்ற மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகள் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டும்,  அடித்து விரட்டப்பட்டும் உடைமைகள் அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள்? சட்டப்பிரிவு 370-இன் அடிப்படையில் சம உரிமை பெற்றவர்கள்    தானே காஷ்மீரி பண்டிட்டுகளும்?

இனப்படுகொலை என்பது மதம் சார்ந்ததல்ல, மனிதம் சார்ந்தது.  அரசியல் சாசனமும், சட்டமும் ஒருமைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும்தானே தவிர, பிரிவினை வாதத்தை அனுமதிப்பதற்காக அல்ல. இதை உணர்ந்து கொண்டால், காஷ்மீரின் தனி அந்தஸ்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முடிவை நாட்டுப்பற்றும், ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்!.

நன்றி;-தினமணி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...