ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துவிஷயத்தில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறியுள்ளாா்.

முன்னதாக, ஜம்முகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் மறுஆய்வு செய்யும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் திக்விஜய்சிங் சனிக்கிழமை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று ரவிசங்கா் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆகஸ்ட் மாதம் ரத்துசெய்தது. அந்த மாநிலத்தையும் ஜம்முகாஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

இந்நிலையில், எதிா்காலத்தில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியமைத்தால், ஜம்மு-காஷ்மீரின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று கிளப்ஹவுஸ் சமூகவலைதளத்தில் பத்திரிகையாளா் ஒருவா் கேள்வி எழுப்பினாா். இவா் பாகிஸ்தானை சோ்ந்தவா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

அந்த கேள்விக்கு மத்தியபிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங் ஆடியோ வடிவில் அளித்தபதிலில், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்தபோது அந்நடவடிக்கையில் ஜனநாயகம் காணப்பட வில்லை; மனித நேயமும் காணப்பட வில்லை. மாநிலத்தின் பெரும்பாலான தலைவா்களை மத்திய அரசுசிறையில் அடைத்தது. மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியதும், சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததும் சோகம் தரக்கூடிய முடிவு. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி நிச்சயமாக மறு ஆய்வு செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

இதற்கு பாஜக ஏற்கெனவே கடும் எதிா்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுட்டுரையில் இதுதொடா்பாக ரவிசங்கா் பிரசாத் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துதொடா்பாக மீண்டும் சா்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் எழுப்பியுள்ள இந்தசா்ச்சை தொடா்பாக காங்கிரஸ் தலைமை எவ்வித பதிலிலும் தெரிவிக்காமல் மௌனம்காத்து வருகிறது. திக்விஜய் சிங் கூறியதுபோல மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்கவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப் பட்ட பிறகு ஜம்முகாஷ்மீா் மட்டும் லடாக் பகுதியில் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி சிறப்பான நிா்வாகம் உள்ளது. இருயூனியன் பிரதேசங்களின் தொலைதூர கிராமங்களுக்கும் கரோனா தடுப்பூசி கொண்டு சோ்க்கப் பட்டுள்ளது. இதுதான் நல்ல நிா்வாகத்தின் அடையாளம்’ என்று கூறியுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...