ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் வரலாம் விமானம் அனுப்ப தயார்

ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தைகாண ராகுல்காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத்தயாராக உள்ளேன். அதன்பிறகு உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேசவேண்டும். ராகுல் காந்தி பொறுப்பான தலைவர். அவர் இதுபோல பேசியிருக்கக்கூடாது.

மத கண்ணோட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வில்லை. நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காகவும்தான் அது ரத்துசெய்யப்பட்டது. இதை சிலர் வேண்டுமென்றே பிரச்னையாக்கி வருகின்றனர். அவர்களது முயற்சி வெற்றிபெறாது. வெளிநாட்டு ஊடகம் இதை பிரச்னையாக்க பார்த்தது. இதையடுத்து வெளிநாட்டு ஊடகத்தை எச்சரித்தோம்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அங்கு வந்து துப்பாக்கித்தோட்டா பாய்ந்து யாரேனும் சிகிச்சை எடுக்கிறார்களா என பார்க்கலாம். 4 பேர் கால்களில் பெல்லட்தோட்டா பாய்ந்து சிகிச்சை எடுத்துவருகின்றனர். அதுவும் பெரிய காயமில்லை.

காஷ்மீர் வதை முகாம்களாக மாறிவருவதாக கூறுவதை ஏற்க முடியாது. அந்த முகாம் எப்படி இருக்கும் என்பதை அறிவேன். நான் 30 முறை சிறைக்குசென்றுள்ளேன். எமர்ஜென்சி காலத்தில் மக்களை ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவைத்தது  காங்கிரஸ். அப்படி சிறையில் இருந்தும், யாரும் அதை வதை முகாம் எனத் தெரிவிக்க வில்லை. தடுப்புக்காவல் என்பது வதை முகாமா?.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பக்ரீத் சிறப்புத்தொழுகை அமைதியாக நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதனால் வழக்கமான சூழ்நிலையில் மக்கள், பொருட்களை வாங்கிச்சென்றனர்.
அதேநேரத்தில் பிரச்னைக் குரிய இடங்களில் மட்டும், அமைதி நிலவுவதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்தனர். ஏனெனில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது

தில்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை இரவு பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதேபோல், பிற கட்சித்தலைவர்கள் சிலரும் ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தனர்.இது குறித்து ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் திங்கள் கிழமை செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...