மோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியிலுள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அதில், முப்படைத் தளபதி பதவி, ஒரே தேசம் – ஒரேதேர்தல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் உரையாற்றினார்.

பிரதமர் மோடியின் உரை தொடர்பாக பாஜக செயல்தலைவர் ஜெ.பி. நட்டா கூறுகையில், இதுமிகவும் ஊக்கம் தரக்கூடிய உரையாக அமைந்தது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. விரைவில் வளர்ச்சி யடைந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றார்.

மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதிகரித்துவரும் மக்கள்தொகை குறித்து பிரதமர் மோடி பேசியதை வரவேற்றார்.

அத்துறையின் இணையமைச்சர் சஞ்சீவ் பால்யான் கூறுகையில், மக்கள் தொகைப் பிரச்னையை, எந்த மதத்துடனோ அல்லது ஜாதியுடனோ தொடர்புபடுத்தக்கூடாது. நாட்டின் மக்கள்தொகை மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டுவரத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டுமக்களின் நல்வாழ்வுக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...