தமிழகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவோம்

அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டுள்ளதை யடுத்து, செப்டம்பர் 1 முதல் “ஒரே தேசம், ஒரே அரசியலமைப்புச் சட்டம்” பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை “ஒரே தேசம், ஒரே அரசியலமைப்பு சட்டம்” என்கிற பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளவுள்ளது. ஒருமாதம் நடைபெறவுள்ள இந்த பிரசாரத்தின்போது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதற்கான முடிவில் இருக்கும்,  மத்திய அரசின் நிலைப்பாடு, வாதங்கள் உள்ளிட்டவற்றை மக்களிடம்கொண்டு சேர்க்கவுள்ளோம். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்ய திட்டமிட்டுள்ளோம்.

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2000 பேரை கட்சித்தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். அவர்களிடம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கான நோக்கம் விளக்கப்படும். அவர்கள், அவர்களது பகுதியில் இருக்கும் மக்களிடம் இது குறித்து எடுத்துரைப்பார்கள்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநடவடிக்கை முழுக்க முழுக்க சட்டரீதியாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் தமிழகத்தின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களை சென்றடைவோம் என்று திமுகவுக்கு சவால்விடுக்கிறோம்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களால் இடஒதுக்கீடு பலன்களை அனுபவிக்க முடியவில்லை. தமிழகத்தில் இருக்கும் மக்கள் பலன்பெறுவதுபோல் காஷ்மீர் மக்களும் பலன் அடைய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் பெண்கள் மற்றமாநில ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால், அவர்கள் தங்களது உரிமைகளை இழக்கநேரிடும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம், நல்லாட்சி, இட ஒதுக்கீடு உள்ளிட்டவை தேவைப்படுகிறது.

நீண்டகாலமாக பாஜக எதிர்க்கட்சியாக இருந்துள்ளது. ஆனால், இந்தியா போரில் ஈடுபட்டிருக்கும் போது நாங்கள் எந்த கருத்தும் கூறியதில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கூறியகருத்தை பாகிஸ்தான் ஐ.நா. வில்  இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தில் பயன் படுத்தியுள்ளது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...