காஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்

ஐ.நா.,மனித உரிமை ஆணையகூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்நாடு தாக்கல் செய்த மனுவில், காங்., எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு காங்கிரஸ் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சீனாவைதவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவில்லை. இதனால், சர்வதேச அமைப்புகளில் இந்தவிவகாரத்தை எழுப்ப உள்ளதாக அந்நாடு கூறியது. இதன் இடையே, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டம் இன்று (செப்.,9) முதல் வரும் 27 வரை நடக்க உள்ளது.

இந்நிலையில், இந்தஆணையத்தில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 115 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பாகிஸ்தான் தாக்கல்செய்துள்ளதாகவும், அதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், காஷ்மீர் சிறப்பு சட்டம்ரத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களையே கூறிவந்தன. பாகிஸ்தானின் குரலாகவே ஒலித்தன, காஸ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, மக்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்போன்ற கருத்துக்களை உதிர்த்தன. இதை தற்போது வலுவான ஆதாரமாக காட்ட பாக்கிஸ்தான் முயல்கிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாமுகம்மது குரேஷி பேசும்போது, காஷ்மீரில், மனித உரிமை மீறப்படுகிறது. இது குறித்து ஐ.நா., விசாரணை நடத்த வேண்டும். காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டும். இந்த குழு அமைப்பதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றார்.

இந்த கூட்டத்தில், இந்திய தரப்பில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த அஜய் பசாரியா, விஜய் தாகூர் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள், பாகிஸ்தான் கருத்துகளுக்கு, உரிய பதிலடி கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...