காஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்

ஐ.நா.,மனித உரிமை ஆணையகூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்நாடு தாக்கல் செய்த மனுவில், காங்., எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு காங்கிரஸ் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சீனாவைதவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவில்லை. இதனால், சர்வதேச அமைப்புகளில் இந்தவிவகாரத்தை எழுப்ப உள்ளதாக அந்நாடு கூறியது. இதன் இடையே, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டம் இன்று (செப்.,9) முதல் வரும் 27 வரை நடக்க உள்ளது.

இந்நிலையில், இந்தஆணையத்தில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 115 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பாகிஸ்தான் தாக்கல்செய்துள்ளதாகவும், அதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், காஷ்மீர் சிறப்பு சட்டம்ரத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களையே கூறிவந்தன. பாகிஸ்தானின் குரலாகவே ஒலித்தன, காஸ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, மக்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்போன்ற கருத்துக்களை உதிர்த்தன. இதை தற்போது வலுவான ஆதாரமாக காட்ட பாக்கிஸ்தான் முயல்கிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாமுகம்மது குரேஷி பேசும்போது, காஷ்மீரில், மனித உரிமை மீறப்படுகிறது. இது குறித்து ஐ.நா., விசாரணை நடத்த வேண்டும். காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டும். இந்த குழு அமைப்பதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றார்.

இந்த கூட்டத்தில், இந்திய தரப்பில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த அஜய் பசாரியா, விஜய் தாகூர் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள், பாகிஸ்தான் கருத்துகளுக்கு, உரிய பதிலடி கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...