ஐ.நா.,மனித உரிமை ஆணையகூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்நாடு தாக்கல் செய்த மனுவில், காங்., எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு காங்கிரஸ் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சீனாவைதவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவில்லை. இதனால், சர்வதேச அமைப்புகளில் இந்தவிவகாரத்தை எழுப்ப உள்ளதாக அந்நாடு கூறியது. இதன் இடையே, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டம் இன்று (செப்.,9) முதல் வரும் 27 வரை நடக்க உள்ளது.
இந்நிலையில், இந்தஆணையத்தில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 115 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பாகிஸ்தான் தாக்கல்செய்துள்ளதாகவும், அதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், காஷ்மீர் சிறப்பு சட்டம்ரத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களையே கூறிவந்தன. பாகிஸ்தானின் குரலாகவே ஒலித்தன, காஸ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, மக்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்போன்ற கருத்துக்களை உதிர்த்தன. இதை தற்போது வலுவான ஆதாரமாக காட்ட பாக்கிஸ்தான் முயல்கிறது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாமுகம்மது குரேஷி பேசும்போது, காஷ்மீரில், மனித உரிமை மீறப்படுகிறது. இது குறித்து ஐ.நா., விசாரணை நடத்த வேண்டும். காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டும். இந்த குழு அமைப்பதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றார்.
இந்த கூட்டத்தில், இந்திய தரப்பில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த அஜய் பசாரியா, விஜய் தாகூர் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள், பாகிஸ்தான் கருத்துகளுக்கு, உரிய பதிலடி கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |