பாஜக.,வை நாடெங்கும் உச்சரிக்க வைத்தவர்

பொழுது விடிஞ்சதும்… ஆயிரக்கணக்கானோர் நடமாடும் அந்த ரயில்வே ஸ்டேஷனில்.. ஓடிவந்து டீக்கடையை சுத்தம்செய்றதுதான் 15 வயது சிறுவனுக்கு முதல்வேலை.. 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஹிமாச்சல மலைப்பகுதிகளை விழிபிதுங்க சுற்றிதிரிந்த சிறுவனை யாரும் திரும்பி கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை.. அவர்தான் இன்று உலகமே அண்ணாந்து பார்க்கும் நம் பிரதமர் நரேந்திர மோடி!

அன்றைய நிலைவேறு.. இன்றைய நிலை வேறு.. விஸ்வரூபமாக உயர்ந்து நிற்கிறார் நரேந்திர மோடி! பாஜக என்ற கட்சியை இந்தியாவே சரியாக அறியாத போது, தொண்டனாக தன்னை 34 வருஷங்களுக்கு முன்பு மோடி தன்னை இணைத்துகொண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!

1967-ல் அவருக்கு பிடிக்காமலேயே ஒருகல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்கள். அதனால் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். அதற்கு பிறகுதான் கட்சியில் வேகமாக செயல்பட துவங்கினார்.

1971-ல்தான் ஆர்எஸ்எஸ்-ல் அவரதுபணிகள் வேகம் எடுத்தன. இம்மியளவும் தன்கொள்கையை மாற்றிகொள்ளாத போக்கினால்தான், கட்சி இவரை வாரி அணைத்துகொண்டது. ஆனால் பொறுப்புகள்வந்து சேர்ந்ததோ 1985-ல்தான்! 2001-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை என்றே சொல்லலாம். பாஜகவின் பொதுச்செயலாளர், உடனே மாநில முதல்வர் என அந்தஸ்துகளும், பதவிகளும் விறுவிறுவென உயர்ந்தன.

கடுமையான உழைப்பால் தன்னை மெருகேற்றிகொண்டதன் பலனை கட்சியில் மெதுவாக அனுபவிக்க தொடங்கினார் மோடி. அதன்பலனை கொஞ்சம் கொஞ்சமாக ருசிக்க தொடங்கினார். அதேகுஜராத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். இதற்கு சாட்சிதான் பலடீக்கடைகளுக்கு “நமோ டீக்கடை” என்று அவரால் சுண்டி இழுக்கப்பட்டவர்கள் பெயர் வைத்தார்கள்.

ஆனால் 2014-ல் புதிய சக்தியாக மோடி உருவெடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.  பாஜக என்ற கட்சியை நாடெங்கும் உச்சரிக்க வைத்து…உலகம் முழுமைக்கும் கொண்டுசென்றார்! இதற்கு முன்பு பண்டித நேரு, இந்திரா காந்தியே உலக அளவில் புகழ்வாய்ந்த் தலைவர்களாக விளங்கினார்கள். இதற்கு அடுத்து மோடி என்று ஆனது! மன் கி பாத் என்ற நிகழ்ச்சியை ரேடியோவில் பேசி மக்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

அதிரடி அறிவிப்புகளால் மக்களை நிலைகுலைய வைத்தவர் என்ற அடையாளத்தையும் சுமந்துள்ள மோடி, சர்ச்சைகளின் நாயகன் என்ற பெயரையும்பெற தவறவில்லை.கள்ளநோட்டு ஒழிப்பு, பணமதிப் பிழப்பு நடவடிக்கை, வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் இந்தியாவுக்கு முதலீடு என… சர்வதேச அளவிலான பெருமையாகட்டும், 80 லட்சம் குடும்பங்களுக்கு இலவசகேஸ் இணைப்பு, எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, என உள்ளூர் திட்டங்களாட்டும்.. எல்லாமே மோடி பெயரை தாங்கி நிற்கின்றன.

மடிப்புகள், கசங்கல்கள் இல்லாத நீட்டான டிரஸ் அணிவது கூட மற்றவரைகளை ஈர்க்கும் விதமாகவே உள்ளது! யார் எவ்வளவு திட்டினாலும் அதை ஆத்திரம், ஆவேசத்தால் அணுகாதவர்! டென்ஷன் என்பதோ, பதட்டம் என்பதோ தென்பட்டதே இல்லை. உச்ச பட்சமாக முகம் வெளிறி காணப்படும். அவ்வளவுதான்.. மற்றபடி ஒரு ஸ்மைல் தான்! எப்போதுமே ஒருவித நாகரீக அரசியல்வாதியாகவே தன்னை எப்போதும் முன்னிறுத்தி கொள்ளும் இந்த ஏழைத் தாயின் மகன் நீடூடி வாழ நாட்டு மக்களின் வாழ்த்துக்கள்!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...