தேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்

தேச நலனே எங்களுக்கு மிகமுக்கியம். தேச நலனுக்கென மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக் குரியது. நாட்டில் சிலர் வன் முறைகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனை ஏற்க முடியாது.சமூகத்தில் சில அருவருக்கதக்க சம்பவங்கள் வன்முறைகள் நடக்கிறது. இது இந்ததேசத்தையும், இந்து மக்களையும் இழிவுப் படுத்துவதற்காக திட்மிட்டு நடக்கும் சதியாகும்.

லோக்சபா தேர்தலுக்கு பின்னர் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இது உலகளவில் வளர்ந்திருப்பதை காணமுடிகிறது. எல்லையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதம் குறைந்துள்ளது. ஜன நாயகத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு அனைவரும் ஒத்துபோக வேண்டும் என்பதல்ல. அதேநேரத்தில் சுயநல நோக்கு இருக்கும் விஷயத்தில் தேசநலனை சமரசம் செய்துகொள்ள முடியாது.

சில சமூக வன்முறைகளை, கும்பல்படுகொலை என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இதன் மூலமாக, நமது நாடு, இந்துகலாச்சாரம் ஆகியவற்றின் புகழை கெடுப்பதோடு, சமூகங்கள் நடுவே பயத்தை உண்டு செய்கிறார்கள்.

கும்பல் படுகொலை என்பது, இந்தியாவுக்கு தொடர்பற்றது. இந்தவார்த்தையே மேற்கத்திய கட்டுமானம். நமது பண்பாட்டில் இப்படி ஒருவார்த்தைக்கே இடம் கிடையாது. வேறு ஒருமதத்தின் கோட்பாட்டில் உள்ள வரிகளை நம் மீது சுமத்துகிறார்கள். இந்தியர்கள் மீது இதுபோன்ற வார்த்தைகளை இனிமேலும் யாரும் சுமத்தகூடாது. கொலைச் சம்பவங்கள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. இந்தநாட்டின் மக்கள் சகிப்புத்தன்மையோடு வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த கொள்கைக்காக, பங்களிக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சில பிற்போக்கு சிந்தனை கொண்ட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழக்கூடியவர்கள், அரசின் இந்த நடவடிக்கையை, எதிர்க்கிறார்கள். இந்தியா வலிமையான நாடாக மாறி விடக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். அவர்கள்தான் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற, தசரா, நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசியது

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...