இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும்

விஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு நேரில்சென்று தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் நேற்று தரிசனம் செய்தார். குடுமியான்மலை, ஆவுடையார் கோயில் உள்பட ஊர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்ற வானதி ஸ்ரீனிவாசன் பின் சித்தன வாசலில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வருவதால், அது உலகப்புகழ்மிக்க சுற்றுலாத் தலமாக விரைவில் மாறும். இந்த நிகழ்ச்சி இருபெரும் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்வு குறித்து, நீதிமன்ற வழிக்காட்டுதல்படி டிஜிட்டல்பேனர்கள் வைப்பதில் தவறு ஏதுமில்லை.

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் நாங்கள் அதிமுக.,வுக்கு ஆதரவளிக்கிறோம். அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். பிரச்சாரத்தில் பங்கேற்பவர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இடைத் தேர்தல் நடக்கும் 2 சட்டசபைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி, அமோக வெற்றிபெறும்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டும். தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் கட்சியாக பாஜக உள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதைக் கட்சியின் தலைமை அறிவிக்கும்.

ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம் தான். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலே, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் தான் நடக்கிறது. இந்த சூழலில், இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது வருத்தம் தரக்கூடிய ஒன்று. காவல் துறையினரே ஆர்எஸ்எஸ் மீது அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்துகிறார்கள். காவல் துறையினரின் இந்த போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்போதைய சூழலில் அரசுப்பள்ளிகளை மூடுவதுக்கான காரணம் யார் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும். நமக்குப்பிடித்த மொழியை நாம் கற்றுக்கொள்ளலாம். நம் மொழியைக் காக்கும் முயற்சியை திமுக முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...