இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும்

விஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு நேரில்சென்று தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் நேற்று தரிசனம் செய்தார். குடுமியான்மலை, ஆவுடையார் கோயில் உள்பட ஊர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்ற வானதி ஸ்ரீனிவாசன் பின் சித்தன வாசலில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வருவதால், அது உலகப்புகழ்மிக்க சுற்றுலாத் தலமாக விரைவில் மாறும். இந்த நிகழ்ச்சி இருபெரும் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்வு குறித்து, நீதிமன்ற வழிக்காட்டுதல்படி டிஜிட்டல்பேனர்கள் வைப்பதில் தவறு ஏதுமில்லை.

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் நாங்கள் அதிமுக.,வுக்கு ஆதரவளிக்கிறோம். அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். பிரச்சாரத்தில் பங்கேற்பவர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இடைத் தேர்தல் நடக்கும் 2 சட்டசபைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி, அமோக வெற்றிபெறும்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டும். தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் கட்சியாக பாஜக உள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதைக் கட்சியின் தலைமை அறிவிக்கும்.

ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம் தான். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலே, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் தான் நடக்கிறது. இந்த சூழலில், இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது வருத்தம் தரக்கூடிய ஒன்று. காவல் துறையினரே ஆர்எஸ்எஸ் மீது அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்துகிறார்கள். காவல் துறையினரின் இந்த போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்போதைய சூழலில் அரசுப்பள்ளிகளை மூடுவதுக்கான காரணம் யார் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும். நமக்குப்பிடித்த மொழியை நாம் கற்றுக்கொள்ளலாம். நம் மொழியைக் காக்கும் முயற்சியை திமுக முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...