இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும்

விஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு நேரில்சென்று தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் நேற்று தரிசனம் செய்தார். குடுமியான்மலை, ஆவுடையார் கோயில் உள்பட ஊர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்ற வானதி ஸ்ரீனிவாசன் பின் சித்தன வாசலில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வருவதால், அது உலகப்புகழ்மிக்க சுற்றுலாத் தலமாக விரைவில் மாறும். இந்த நிகழ்ச்சி இருபெரும் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்வு குறித்து, நீதிமன்ற வழிக்காட்டுதல்படி டிஜிட்டல்பேனர்கள் வைப்பதில் தவறு ஏதுமில்லை.

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் நாங்கள் அதிமுக.,வுக்கு ஆதரவளிக்கிறோம். அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். பிரச்சாரத்தில் பங்கேற்பவர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இடைத் தேர்தல் நடக்கும் 2 சட்டசபைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி, அமோக வெற்றிபெறும்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டும். தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் கட்சியாக பாஜக உள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதைக் கட்சியின் தலைமை அறிவிக்கும்.

ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம் தான். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலே, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் தான் நடக்கிறது. இந்த சூழலில், இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது வருத்தம் தரக்கூடிய ஒன்று. காவல் துறையினரே ஆர்எஸ்எஸ் மீது அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்துகிறார்கள். காவல் துறையினரின் இந்த போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்போதைய சூழலில் அரசுப்பள்ளிகளை மூடுவதுக்கான காரணம் யார் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும். நமக்குப்பிடித்த மொழியை நாம் கற்றுக்கொள்ளலாம். நம் மொழியைக் காக்கும் முயற்சியை திமுக முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...