ஆவலுடன் களைக்கட்டும் மாமல்லபுரம்

சீனா அதிபர் ஸி ஜின்பிங்கை அக்டோபர் 11,12 ஆகிய நாட்களில் பிரதமர் மோடி சந்தித்துபேச உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான 2-வது சந்திப்பு அக்டோபர் 11 முதல் 12-ந் தேதி வரை நடைபெறும்.

இச்சந்திப்பின்போது பிராந்திய மற்றும் சர்வதேசளவிலான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். இச்சந்திப்பு மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில்நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது எந்த வித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் 13-ல் ஜின்பிங் நேபாளத்துக்கு அரசு முறை பயணமாக செல்கிறார்.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்காக கடற்கரை நகரமான மாமல்லபுரம் கோலாகலமாக தயாராகிவருகிறது. மாமல்லபுரத்தில் புராதான சிற்பங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருதலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் ஆவலுடன் களைகட்டிவருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...