ஆவலுடன் களைக்கட்டும் மாமல்லபுரம்

சீனா அதிபர் ஸி ஜின்பிங்கை அக்டோபர் 11,12 ஆகிய நாட்களில் பிரதமர் மோடி சந்தித்துபேச உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான 2-வது சந்திப்பு அக்டோபர் 11 முதல் 12-ந் தேதி வரை நடைபெறும்.

இச்சந்திப்பின்போது பிராந்திய மற்றும் சர்வதேசளவிலான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். இச்சந்திப்பு மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில்நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது எந்த வித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் 13-ல் ஜின்பிங் நேபாளத்துக்கு அரசு முறை பயணமாக செல்கிறார்.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்காக கடற்கரை நகரமான மாமல்லபுரம் கோலாகலமாக தயாராகிவருகிறது. மாமல்லபுரத்தில் புராதான சிற்பங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருதலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் ஆவலுடன் களைகட்டிவருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...