தீர்ப்புக்கு தலைவர்கள் கருத்து

அயோத்தியில் சர்ச்சைக் குரிய இடத்தில் ராமர்கோவில் கட்ட அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தர விடப்பட்டது.

இதையொட்டி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இது.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி :
இந்தத் தீர்ப்பையடுத்து, பழையதை மறந்து, அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி உடையதாக இந்தியாவை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நம்முடைய விருப்பத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இந்ததீர்ப்பு இந்தியாவின் சமூக இழையை பலப்படுத்தும். இந்த வரலாற்று தீர்ப்புக்கு பின்னர் அனைவரும் அமைதியை, நல்லிணக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும்.

மத்திய போக்கு வரத்து மந்திரி நிதின்கட்காரி 

அயோத்தி விவகாரத்தில், ஜனநாயக நாட்டின் மக்கள் என்ற வகையில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும். நாம் அனைவரும் நீதித் துறை மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி 

நாட்டு மக்களுடன் இணைந்து, இந்தத்தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதன் மூலம் என்னுடைய நிலைப்பாட்டுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டும் என்பதற்கான முயற்சிக்கு, கடவுளின் ஆசி கிடைத்துள்ளது..

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 

இந்த நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள். அனை வரும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் 

சுப்ரீம் கோர்ட்டு ஒரு மனதாக வழங்கிய தீர்ப்பு, நாட்டின் முன் உள்ள மிகப் பெரிய பிரச்சினைக்கு தீர்வுகாண உதவி உள்ளது. அனைவரும் வரவேற்க வேண்டும்.

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே 

ராமர் கோவில் போராட்டத்தில் கரசேவகர்களின் தியாகம் வீணாக வில்லை. ராமர் கோவில் விரைவாக கட்டப்பட வேண்டும்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு 

மரியாதைக்குரிய நீதிபதிகள் எடுத்துள்ள ஒரு மனதான முடிவை மதிக்க வேண்டும். அனைவரும் அமைதியையும், நல்லிணக்க த்தையும் காக்கவேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 

அம்பேத்கர் உருவாக்கிய மதச் சார்பற்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்கது. நாம் மதிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் தேவே கவுடா 

இது ஒரு சமநிலையான முடிவு. நான்வரவேற்கிறேன். கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் மிகப் பெரிய பிரச்சினை. அதனுள் நான் செல்ல விரும்பவில்லை.

மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் 

சுப்ரீம் கோர்ட்டு மிகத் தெளிவான, ஒருமனதான தீர்ப்பை வழங்கி உள்ளது. அனைவரின் உணர்வுகளும் தீர்ப்பில் மதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா 

இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றி. தோல்வி இல்லை. அனைவரும் முழுமனதோடு தீர்ப்பை வரவேற்போம். சமூக நல்லிணக்கமும், அமைதியும் நிலவட்டும்.

மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் 

அயோத்தி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்திருக்கிறது. இதை நாம் மதிக்கவேண்டும். எந்த வகையிலும் உற்சாகத்தை, கொண்டாட்டத்தை, போராட்டத்தை வெளிப்படுத்தி விட கூடாது.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 

சுப்ரீம் கோர்ட்டு முடிவை வரவேற்கிறோம். நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் கட்டிக்காக்க மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் வரவேற்கவேண்டும். இனி யாரும் மறு ஆய்வு கோரக் கூடாது. இது எனது வேண்டுகோள்.

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் 

நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தீர்ப்புவந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அமைதியையும், நல்லிணக் கத்தையும் காக்க வேண்டும்.

ஆந்திர முதல்–மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி 

தீர்ப்பை மதிப்போம் என இருதரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளனர். தீர்ப்பையொட்டி சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் குலைக்கிற வகையில் கருத்து வெளியிடக் கூடாது.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் 

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைக்கு சுப்ரீம்கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கி உள்ளது. பல்லாண்டுகால பிரச்சினை, முடிவுக்கு வந்துள்ளது. அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காக்கவேண்டும்.

பா.ஜனதா துணைத்தலைவர் சிவராஜ் சிங் சவுகான் 

இந்த வழக்கில் யாருக்கும் தோல்வி இல்லை. அனைவரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும். வரவேற்க வேண்டும்.

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். இரு சமூகத்தினருக்கும் மகிழ்ச்சியையும், நிவாரணத்தையும் கொண்டு வந்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ். 

இது வரலாற்று தீர்ப்பு. மிகப்பெரிய ராமர் கோவில் கட்டப்படும். முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தருவது வரவேற்கத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...