தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

‘தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிடவேண்டும்’ என, சமூக சேவகர், எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் தகவல் அதிகாரி, மத்திய தகவல் ஆணையர் அலுவலகம் ஆகியவை விசாரித்தன. அதைத்தொடர்ந்து விசாரித்த, டில்லி ஐகோர்ட்டின் மூன்று நீதிபதிகள் அமர்வு, 2010ல் தீர்ப்பு அளித்தது. ‘தகவல்அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும்’ என, தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சிவ் கன்னா அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்துவந்தது.

இந்த வழக்கில் இன்று(நவ.,13) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல்சாசன அமர்வு, தகவல் அறியும் சட்டம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கும் பொருந்தும் எனக்கூறி, டில்லி ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது. நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதித்துறை சுதந்திரத்தை காரணம்காட்டி பொறுப்பை தட்டிகழிக்க முடியாது. பொறுப்பும், சுதந்திரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...