நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் பாஜக 353 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பாஜக எம்.பி.க்கள் மீது பிரதமர் மோடி கோபமாக இருப்பதாக சொல்ல படுகிறது.இதுபற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத்தில் நடக்கும் அவை கூட்டங்களில் பாஜக எம்.பி.க்கள் பெரும்பாலும் வராமல் அப்சென்ட்ஆவதால் மோடி அதிருப்தியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமாக நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் குழுகூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘எந்த காரணமும் இல்லாமல் எம்.பிகள் அவைக்கு வராமல் இருப்பதை மோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். அதனால் அனைவரும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசவேண்டிய இடத்தில் பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து அப்சென்ட் ஆவது எதிர்கட்சியினர் மட்டுமின்றி பிரதமர் மோடிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |