பட்ஜெட் கொண்டாட தெரியாதவர்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது.

இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், குடிநீர், இயற்கை வள மேம்பாடு , உள்நாட்டு பாதுகாப்பு என அணைத்து துறைகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார சரிவு, உள்நாட்டிலும் அதன் தாக்கத்தால் வரி வருவாய் சரிவு, அதனால் உருவான நிதி பற்றாக்குறை என்று ஒரு சிக்கலான கால கட்டத்திலும், அணைத்து துறைகளுக்கும் போதுமான நிதி சத்திய  பட்டுள்ளது.

இங்கே கவர்ச்சி திட்ட அறிவிப்புகள் இல்லை, இலவசங்களுக்கு இடம் இல்லை என்பதாலோ!, என்னவோ!!, இரண்டு மணி நேர நீண்ட நெடிய, பல நூறு பக்கங்களை கொண்ட பட்ஜெட்டை, “ஒரு சில நிமிடங்களிலேயே படித்து இதில் ஒன்றும் இல்லை, மக்களை ஏமாற்றும் செயல்” என்று கருத்து கூறிய ராகுல் காந்தி, ஸ்டாலின் போன்ற அதி மேதாவிகளை என்ன வென்று சொல்வது. இவர்களது ஆட்சி காலத்தைய பட்ஜெட்டை அப்படியே வாசித்திருந்தால் கூட இவர்கள் இதே கருத்தை தான் கூறப் போகிறார்கள். .

இதற்காக இங்கே நாம்  புள்ளி விவரங்களையோ, துறை வாரியாக ஒதுக்கப்பட்ட லட்சம் கோடிகளை பற்றியோ பத்தி பத்தியாக எழுதி தார்க்கம் செய்யப் போவதில்லை. எதார்த்தங்களையே  பேசுவோம். உதாரணத்துக்கு சுகாதார  துறையில் ஒவ்வொரு மாவட்ட மருத்துவ மனைகளையும், மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டம் முன்னெடுக்க பட்டுள்ளது. இது வணிக மையமாகிவிட்ட இன்றைய மருத்துவ துறையில், மருத்துவர்களின்   பற்றாக் குறையை போக்கி சேவை மனப்பான்மையை வளர்த்தெடுக்கும்.  மத்திய அரசின் மருந்தகங்களில் 2000க்கும் அதிகமான மலிவு விலை ஜெனிரிக் மருந்து வகைகளை கொண்டு வருதல். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் குடும்பத்துக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு இவைகளை எல்லாம் சொல்லலாம்.

வேளாண் துறையில் இது வரை இருந்திடாத  வகையில் 15லட்சம் கோடி  வரை வங்கி கடன் வழங்கும் திட்டம், விவசாய விளை பொருட்களை உள்ளூர் சுய உதவி குழுக்கள் மூலமே சேமித்து வைக்கும் திட்டம், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல தனி சரக்கு ரயில் திட்டம் என்று, நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்களே இங்கு கொட்டி கிடக்கின்றன.

வறட்சி காலங்களில் காலிக் குட போராட்டங்களை, ரயில், பஸ்ஸில்  தண்ணீர்  கொண்டுவந்த அவலங்களை, எல்லாம்  முக்கிய செய்திகளாக்கிய  செய்தி ஊடகங்கள், இன்று  3.2 லட்சம் கோடி செலவில் 14 கோடி வீடுகளுக்கே , சுத்தமான குடிநீரை குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கும் திட்டத்தை கண்டு கொள்ளாதது ஏனோ?. ஒருவேளை இலவச மோடி குடிநீர் பாட்டில்களில்,  தினமும் வீடு தேடி வரும் என்றிருந்தால் கொண்டாடி இருப்பார்களோ என்னவோ?.

நன்றி தமிழ் தாமரை வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...