உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாசல பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
நமது நாட்டின் அங்கமான அருணாசல பிரதேசத்தை தாம் ஆக்கிரமித்திருக்கும் தென்திபெத்தின் ஒருபகுதி என கூறி வருகிறது சீனா. இதனை இந்தியா எப்போதும் நிராகரித்து வந்துள்ளது.
தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அருணாசலப் பிரதேசத்துக்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அருணாசலப்பிரதேச மாநிலம் உருவான 34-வது ஆண்டு நிகழ்ச்சியில் அமித்ஷா இன்று பங்கேற்றார்.
மேலும் தொழிற்சாலைகள், சாலைதிட்டங்கள் ஆகியவற்றையும் அமித் ஷா அங்கு தொடங்கி வைத்தார். இதற்கு தான் ஆட்சேபம் தெரிவிப்பதாக வழக்கம்போல கூறியிருக்கிறது சீனா.
இந்தியாவும் சீனாவும் எல்லைபிரச்சனை தொடர்பாக இது வரை 22 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |