22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மூன்றாண்டு காலத்துக்கு செயல்படும்வகையில், 22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

சட்ட ஆணையத்தில் மத்தியஅரசு முன்வைக்கும் விவகாரங்களைத் தவிர, சட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ளும். மேலும் பல்வேறு சீர்திருத்தங்களைப் பற்றிய யோசனைகள் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படும். புதிதாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டங்கள் குறித்தும் இந்த ஆணையம் ஆய்வுசெய்யும். நீதி வழங்குவதற்கான வழி முறைகளில் நிலவும் தாமதத்தை களைவது, வழக்குகளை விரைந்து முடிப்பது, வழக்கிற்கான செலவை குறைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேவையான ஆய்வு, ஆராய்ச்சி ஆகியவற்றை ஆணையம் மேற்கொள்ளும். மேலும், பயனில்லாத அல்லது பொருத்தமற்ற, உடனடியாக நீக்கப்படவேண்டிய சட்டங்களை அடையாளம் காண்பதுடன், அவசியமான சட்டங்களைப் பரிந்துரைப்பது, ஏழைகளுக்கு சேவைசெய்யும் வகையில் சட்டரீதியான செயல்பாட்டை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படும்.

மேலும், உரிய அதிகாரம்பெற்ற “தொழில்நுட்பக் குழு’ ஒன்றை அமைக்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கபட்டுள்ளது. இதன்படி மத்திய அரசிற்கான முதன்மை அறிவியல் ஆலோசகரை தலை வராகக் கொண்ட 12 உறுப்பினர்கள் கொண்ட “தொழில் நுட்பக் குழு’ ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம் தேசிய அளவிலான பரிசோதனை மையங்களிலும் அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் உருவாக்கபடும் தொழில்நுட்பங்களை அடையாளம்கண்டு, அவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்கள் குறித்த கொள்கை ரீதியான ஆலோசனைகளை இக்குழு வழங்கும் என்றார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...