சட்டம் அனைத்திலும் மேலானது

தலைநகர் தில்லியில் சர்வதேச நீதித் துறை மாநாடு உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டடத்தில் சனிக் கிழமை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்ஏ.போப்டே ஆகியோர் பங்கேற்றனர்.

2 நாள் நடைபெறும் இந்தமாநாட்டை காலை 10 மணிக்குத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது,

உண்மை மற்றும் சேவைதான் நீதித்துறையின் அடித்தளமாகக் கருதப்படுகின்றன. நாட்டில் எத்தனையோ துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபோல் நீதித்துறையிலும் மாற்றங்கள் கொண்டுவர நாங்கள் பழம் பெறும் ஆயிரக்கணக்கான சட்டங்களை நீக்கினோம். சட்டமே சமூகத்தின் முக்கிய அங்கம்.சட்டம் அனைத்திலும் மேலானது

மரியாதைக்குரிய மகாத்மா காந்தியின் வாழ்க்கை உண்மை மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கபட்டது. அதிலும் அவர் ஒருவழக்குரைஞர் என்பது கூடுதல் சிறப்பு. தான் சந்தித்த முதல்வழக்கு குறித்து தனது சுயசரிதையில் மகாத்மாகாந்தி மிக விரிவாக எழுதியுள்ளார்.

சமீபத்தில், உலகளாவிய விவாதங்களுக்கு உட்பட்ட சிலமுக்கியமான நீதித்துறை தீர்ப்புகள் வந்துள்ளன. இந்ததீர்ப்புகளுக்கு முன்னர், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலகவலைகளையும், சந்தேகங்களையும் வெளிப்படுத்தின, ஆனால் 1.3 பில்லியன் இந்தியர்களும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில்,

பயங்கரவாதிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு தனியுரிமைக்கு இனி இடமில்லை. இது உலகளாவிய சவால் களுக்கான நேரம். நாம் தீர்வுகளை எவ்வாறு நாடுகிறோம் என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக உள்ளது. சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் வழக்கமான ஒழுங்கு முறையின் படி தீர்வுகளை ஏற்றுக்கொள்வது தான் இதற்கு ஒரேபதில் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும் என்றார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பேசுகையில்,

இந்தியா பலகலாச்சாரங்கள் மற்றும் மரபுகளால் உருவான நாடாகும். இதுவே நாட்டின் நீதிஅமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கும் சமமாக பொருந்தும் உண்மையாகும். அனைத்துவகை நாகரிகங்களில் உள்ள கலாச்சார சட்டங்களையும் இந்திய நீதித் துறை ஒருங்கிணைத்துள்ளது என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...