ரத்னாகரன் வால்மீகி யான கதை

ரத்னாகரன் என்பவன் காட்டின் வழியே வரும் வழிப்போக்கர்களை மிரட்டி கொள்ளையடித்து வந்தான்.ஒருநாள் அவ்வழியே வந்த நாரதரை வழி மறித்தான்.தன்னை ஒரு முனிவர் என்றும் ,தன்னிடம் பொருள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நாரதர் ,"ஏனப்பா இந்ததீய செயல்களில் ஈடுபட்டு பழி, பாவங்களை சுமக்கிராயே ? "என்றார். "ஐயா என் மனைவி ,மக்களை காப்பாற்றுவதற்காக இச்செயல்களைச் செய்து வருகிறேன் என்றான். அது சரி நீ செய்யும் இந்த பாவத்தில் உன் மனைவி, மக்களும் பங்கு கொள்வார்களா?"என்றார்.

இதில் என்ன சந்தேகம் .நிச்சயமாய் பாவத்தில் ஒரு பங்கு அவர்களுக்கும் உண்டு "என்றான் திருடன். நீ போய் உன் மனைவி, மக்களிடம் கேட்டு வந்து பதில் சொல் . அதுவரையில் நான் இங்கேயே இருக்கிறேன்"என்றார் நாரதர்.

சரி என்று சொல்லிவிட்டு தான் குடிசைக்கு வந்து மனைவி மக்களிடம், "நான் செய்யும் பாவத்தில் உங்களுக்குப் பங்குஉண்டு தானே ?"என்று கேட்டான். அதற்கு அவன் மனைவி ,"எங்களைக் காப்பாற்றுவது உன் கடமை .நீ செய்யும் பாவங்களுக்கு எவ்வித பங்கும் இல்லை "என்று திட்டவட்டமாக கூறினாள். இதை கேட்டு அவன் அதிர்ச்சி அடைந்தான்.

நடந்த விஷயங்களை நாரதரிடம் தெரிவித்து அவர் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். நாரதர் ,"சரி கவலைப்படாதே இந்த மரத்தடியில் உட்கார்ந்து மரா மரா என்று சொல்லிக் கொண்டு இரு ".நான் திரும்பி வரும்வரை தியானம் செய் "என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

வருடக் கணக்கில் அவனது தியானம் தொடர்ந்தது .மரா மரா என்று அவன் உச்சரித்தது ராம ராம என்று சொல்வது போல்அயிற்று .அவனை சுற்றி புற்று உருவாகி மூடிவிட்டது . ஒரு நாள் நாரதர் திரும்ப அதே பதை வழியாகவே வருகிறார் .புற்று மூடி இருந்த அவனை  அழைத்து அவனுக்கு 'வால்மீகி 'யன பெயரிட்டார் . "நீ ராமாயணம் இயற்றி இறவாப் புகழ் பெறுக "என ஆசீர்வதித்தார் இந்த ரத்னாகரன் தான் ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷீ ஆவார்

Tags; வால்மீகி யான கதை,  வால்மீகி , வால்மீகி முனிவர்

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...