பொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், மாற்றுத் திறனாளிகளின் உண்மையான பலம்

”நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் நீதிகிடைப்பதை உறுதிசெய்வதே, அரசின் முக்கிய கடமை. அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான நம்பிக்கை ஆகியவையே, இதன் அடிப்படை,”

நாட்டை ஆளும் அரசுக்கு, பலமுக்கிய, கடமைகள் உள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிகிடைப்பதை உறுதிசெய்வதே, அரசின் முக்கிய கடமை. அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரது மீதான நம்பிக்கை ஆகியவையே, இதன் அடிப்படைஅம்சங்கள். நாட்டில் உள்ள, 130 கோடி மக்களுக்கும் சேவைசெய்வதையே, மத்திய அரசு, முக்கிய கடமையாக கருகிறது.

எங்களுக்கு முன், மத்தியில்இருந்த அரசுகள், மாற்றுத் திறனாளிகள் நலனில் அக்கறையுடன் செயல் பட்டது இல்லை.ஆனால், மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளை அறிந்து, அவற்றுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளை, பா.ஜ., தலைமையிலான அரசு செய்து வருகிறது.

முந்தைய அரசுகள், மாற்றுத் திறனாளிகளுக்காக, ஒருசில முகாம்களை அமைத்தன. ஆனால், பா.ஜ., அரசு, கடந்த ஐந்தாண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 9,000 முகாம்களை அமைத்துள்ளது. முந்தைய அரசு, மாற்றுத் திறனாளி களுக்கான உபகரணங்களுக்காக, 380 கோடி ரூபாய் மட்டுமே செலவுசெய்தது. ஆனால், பா.ஜ., அரசு, 9,000 கோடி மதிப்பிலான உபகரணங்களை மாற்றுத் திறனாளிகளுக்காக அளித்துள்ளது.

இந்த உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கும். பொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், மாற்றுத் திறனாளிகளின் உண்மையான பலம். இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதும், முகாம்களை அமைப்பதும், எதிர்காலத்தில் பல சாதனைகளுக்கு வழி வகுக்கும்.

கடந்த ஐந்தாண்டுகளில், நாட்டில் உள்ள பல்வேறுதெருக்கள், 700 ரயில்வே ஸ்டேஷன்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், பா.ஜ.க , அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதன்மூலம், அவர்களுக்கு கிடைக்கும் பலன்களின் அளவு அதிகரித்துள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, 3லிருந்து, 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் நலனுக்காகவும், பா.ஜ., அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு முன், மருத்துவத்துக்கா முதியோர் செலவிடும்தொகை, மிகவும் அதிகமாக இருந்தது. தற்போது அந்ததொகை, கணிசமாக குறைந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைதான், இதற்கு காரணம்.

உத்தர பிரதேசத்திம்  பிரயாக்ராஜில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலதிட்ட உதவிகளை வழங்குவதற்கும், புதியதிட்டங்களை துவக்கி வைப்பதற்கும் பிரதமர் மோடி நேற்று வந்தார். நல திட்ட உதவிகளை வழங்கிய பின், பிரதமர் பேசியது:

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...