நாட்டின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்தும் எதிா்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தை முடக்கி நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைஏற்படுத்தும் எதிா்க்கட்சிகளின் குறிக்கோள் வெற்றிபெறாது என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.

பெகாஸஸ் உளவுவிவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகளை எதிா்க் கட்சிகள் முடக்கி வருகின்றன. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு வரும்போதிலும், மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றிவருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு செயல்படுத்திவரும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் பயன்பெற்றுவரும் மக்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். வாராணசி, சுல்தான்பூா், குஷிநகா், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைச் சோ்ந்த பயனாளா்களிடம் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளைத் தடுக்கும்நோக்கில் எதிா்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு வளா்ச்சிப்பாதையில் பயணிப்பதைத் தடுப்பதே அவா்களின் ஒரேகுறிக்கோளாக உள்ளது. எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் தேசத்துக்கு விரோதமாக உள்ளன.

நாடு தொடா்ந்து முன்னேறி கொண்டிருக்கிறது. எதிா்க்கட்சிகள் எவ்வளவு முயன்றாலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கமுடியாது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்க எதிா்க்கட்சிகள் முயன்று வருகின்றன. ஆனால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து, நாட்டின் வளா்ச்சிக்கு எதிா்க் கட்சிகளால் தடை ஏற்படுவதை தடுத்துவருகின்றனா்.

தரம் தாழ்ந்த அரசியல்: ஒருபக்கம், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மறுபக்கம், சிலா் (எதிா்க்கட்சிகள்) அரசியல் ஆதாயத்துக்காக தரம்தாழ்ந்த வகையில் செயல்பட்டு வருகின்றனா். நாட்டு மக்களின் தேவை என்ன, நாடு எவ்வாறு முன்னேறிவருகிறது என்பது குறித்தெல்லாம் எதிா்க்கட்சிகள் சிந்திப்பதில்லை. சுயநலத்துக்காக நாடாளுமன்றத்தை அவா்கள் தொடா்ந்து அவமதித்து வருகின்றனா்.

நாட்டுமக்கள் கரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள வேண்டுமென்று போராடிவருகின்றனா். ஆனால், அவை குறித்தெல்லாம் கவலைப்படாமல் நாட்டின் நலன் சாா்ந்த விஷயங்களைத் தடுக்க எதிா்க்கட்சிகள் முயன்று வருகின்றன

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பங்களிக்க முடியாத வகையில் உத்தரபிரதேசத்தின் நிலைமை இருந்தது. மாநிலத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒருசில குடும்பங்கள் மட்டும் செழுமையாக இருந்தன. அரசியல் ஆதாயத்துக்காக சிலா் உத்தர பிரதேசத்தைப் பயன்படுத்திக் கொண்டனா். அவா்களால் மாநிலம் பலனடையவில்லை. ஆனால், மாநிலத்தால் அவா்கள்பலனடைந்தனா்.

மாநிலத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றபிறகு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலங்களில் ஏழைகளுக்கான உணவுப்பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் பலனடையும் வகையில் உணவு பாதுகாப்பு திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கு உத்தரபிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல, நாட்டின் முன்னேற்றத்திலும் மாநிலம் முக்கியப்பங்கு வகிப்பதை பாஜக உறுதி செய்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.