நாட்டின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்தும் எதிா்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தை முடக்கி நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைஏற்படுத்தும் எதிா்க்கட்சிகளின் குறிக்கோள் வெற்றிபெறாது என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.

பெகாஸஸ் உளவுவிவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகளை எதிா்க் கட்சிகள் முடக்கி வருகின்றன. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு வரும்போதிலும், மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றிவருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு செயல்படுத்திவரும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் பயன்பெற்றுவரும் மக்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். வாராணசி, சுல்தான்பூா், குஷிநகா், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைச் சோ்ந்த பயனாளா்களிடம் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளைத் தடுக்கும்நோக்கில் எதிா்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு வளா்ச்சிப்பாதையில் பயணிப்பதைத் தடுப்பதே அவா்களின் ஒரேகுறிக்கோளாக உள்ளது. எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் தேசத்துக்கு விரோதமாக உள்ளன.

நாடு தொடா்ந்து முன்னேறி கொண்டிருக்கிறது. எதிா்க்கட்சிகள் எவ்வளவு முயன்றாலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கமுடியாது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்க எதிா்க்கட்சிகள் முயன்று வருகின்றன. ஆனால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து, நாட்டின் வளா்ச்சிக்கு எதிா்க் கட்சிகளால் தடை ஏற்படுவதை தடுத்துவருகின்றனா்.

தரம் தாழ்ந்த அரசியல்: ஒருபக்கம், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மறுபக்கம், சிலா் (எதிா்க்கட்சிகள்) அரசியல் ஆதாயத்துக்காக தரம்தாழ்ந்த வகையில் செயல்பட்டு வருகின்றனா். நாட்டு மக்களின் தேவை என்ன, நாடு எவ்வாறு முன்னேறிவருகிறது என்பது குறித்தெல்லாம் எதிா்க்கட்சிகள் சிந்திப்பதில்லை. சுயநலத்துக்காக நாடாளுமன்றத்தை அவா்கள் தொடா்ந்து அவமதித்து வருகின்றனா்.

நாட்டுமக்கள் கரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள வேண்டுமென்று போராடிவருகின்றனா். ஆனால், அவை குறித்தெல்லாம் கவலைப்படாமல் நாட்டின் நலன் சாா்ந்த விஷயங்களைத் தடுக்க எதிா்க்கட்சிகள் முயன்று வருகின்றன

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பங்களிக்க முடியாத வகையில் உத்தரபிரதேசத்தின் நிலைமை இருந்தது. மாநிலத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒருசில குடும்பங்கள் மட்டும் செழுமையாக இருந்தன. அரசியல் ஆதாயத்துக்காக சிலா் உத்தர பிரதேசத்தைப் பயன்படுத்திக் கொண்டனா். அவா்களால் மாநிலம் பலனடையவில்லை. ஆனால், மாநிலத்தால் அவா்கள்பலனடைந்தனா்.

மாநிலத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றபிறகு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலங்களில் ஏழைகளுக்கான உணவுப்பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் பலனடையும் வகையில் உணவு பாதுகாப்பு திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கு உத்தரபிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல, நாட்டின் முன்னேற்றத்திலும் மாநிலம் முக்கியப்பங்கு வகிப்பதை பாஜக உறுதி செய்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...