மோடி பிரதமராக பதவியேற்றது முதல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்.
பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன்பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும், டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “இந்த ஞாயிற்று கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் இருந்து வெளியேறலாமா என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த டுவிட்டர்பதிவுக்கு பலரும் “நோசார்” (#NoSir) என்று பதிவிட்டு வருகின்றனர். தற்போது #NoSir என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |