கரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

கரோனா வைரஸ்தொற்று குறித்து இந்திய மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலி சென்றுதிரும்பிய தில்லி நபருக்கும், துபாய்சென்று திரும்பிய தெலங்கானாவைச் சேர்ந்தவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் தில்லி நபரின் குடும்பத்தினருக்கும் கரோனா அறிகுறி இருப்பதால் அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது, சில சின்னச்சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அத்துடன், கைகளை அடிக்கடி கழுவுங்கள், கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு, வாயைத்தொட வேண்டாம், வெளியிடங்களில் கவனமாக இருங்கள் என்று போஸ்டரையும் இணைத்துள்ளார்.

மேலும், கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துகொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கபட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது முதல் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்வதுவரை பல்வேறு துறை அமைச்சகங்கள், மாநிலங்கள் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...