பிரதமரின் ட்விட்டர் கணக்கை முதல் நபராக நிர்வகித்த தமிழ்ப் பெண்

சர்வதேச மகளிர்தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் தினத்துக்கு வாழ்த்துகூறி தனது சமூக வலைதள கணக்கை பெண் சாதனையாளர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளிட்டுள்ள செய்தியில், மகளிர்தினத்தை முன்னிட்டு இன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிப்பர். மேலும் 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கைபயணத்தை டுவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள் வாழ்க்கைபயணம் குறித்த அனுபவங்களைப் பிரதமர் மோடியின் சமூக வலைதளக் கணக்கின் வாயிலாகப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

 

இதில், முதல் நபராக தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ் பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட்செய்தார்.

ஆதரவற்றவர்கள், சாலையோரம் தஞ்சமடைந்த வர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும், FoodBank India என்ற அமைப்பை நிர்வகித்துவரும் சினேகா, தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது அமைப்பைப் பற்றி பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கின் வழியே எடுத்துக் கூறினார்.

மேலும், பலரின் கிண்டலான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

சினேகாவை தொடர்ந்து பலபெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்குகள் வழியே தங்களைப் பற்றி கூற உள்ளனர்.

இரண்டாவதாக, மாளவிகா ஐயர் என்பவர் பிரதமர் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட்செய்தார்.

இந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள்வாழ்க்கை பயணம் குறித்த அனுபவங்களை பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்கின் வாயிலாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...