குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது

‘குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது; இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும்’ என மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் தெரிவித்தார்

டில்லியில் ஏற்பட்ட கலவரம் குறித்து ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது அமித் ஷா பதில் அளித்து பேசினார். அவர் மேலும் பேசியது,’ டில்லி கலவரத்தின் போது பாதிக்கபட்டவர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். கலவரத்திற்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமுடியாது. மத வித்தியாச மின்றி கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின்முன்பு அனைவரும் கொண்டு வரப் படுவார்கள்.

கலவரகாரர்கள் இந்தியன் பினல்கோட் மற்றும் இந்தியன் கிரிமினல் கோடுக்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். கலவரக்காரர்களின் அனைத்து விவரங்களையும் நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம். ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை கலவரக் காரர்களை அடையாள காண பயன்படுத்த படுகிறது.

ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து வருகிறோம். இதுவரை 700க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரக்காரர்களை அடையாளம் காண்பிப்பதில் மக்கள் எங்களுக்கு உதவுகின்றனர். இவ்விஷயத்தை கையாள்வதில் அரசு முன் மாதிரியாக இருக்கும்.

முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒன்றை நான் கூறி கொள்கிறேன். சிஏஏ குறித்து தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. இச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கஅல்ல; குடியுரிமை வழங்குவதற்காகத்தான். தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்.பி.ஆர்.,) எந்த ஆவணங்களும் தேவையில்லை. விருப்பமிருந்தால் மட்டுமே தகவல்களை அளிக்கலாம். என்பிஆர்., குறித்து யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. அதில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...