குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது

‘குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது; இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும்’ என மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் தெரிவித்தார்

டில்லியில் ஏற்பட்ட கலவரம் குறித்து ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது அமித் ஷா பதில் அளித்து பேசினார். அவர் மேலும் பேசியது,’ டில்லி கலவரத்தின் போது பாதிக்கபட்டவர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். கலவரத்திற்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமுடியாது. மத வித்தியாச மின்றி கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின்முன்பு அனைவரும் கொண்டு வரப் படுவார்கள்.

கலவரகாரர்கள் இந்தியன் பினல்கோட் மற்றும் இந்தியன் கிரிமினல் கோடுக்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். கலவரக்காரர்களின் அனைத்து விவரங்களையும் நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம். ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை கலவரக் காரர்களை அடையாள காண பயன்படுத்த படுகிறது.

ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து வருகிறோம். இதுவரை 700க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரக்காரர்களை அடையாளம் காண்பிப்பதில் மக்கள் எங்களுக்கு உதவுகின்றனர். இவ்விஷயத்தை கையாள்வதில் அரசு முன் மாதிரியாக இருக்கும்.

முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒன்றை நான் கூறி கொள்கிறேன். சிஏஏ குறித்து தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. இச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கஅல்ல; குடியுரிமை வழங்குவதற்காகத்தான். தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்.பி.ஆர்.,) எந்த ஆவணங்களும் தேவையில்லை. விருப்பமிருந்தால் மட்டுமே தகவல்களை அளிக்கலாம். என்பிஆர்., குறித்து யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. அதில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...