கோவையில் ஹிந்து அமைப்புகளைசேர்ந்த ஆனந்த், சூர்ய பிரகாஷ் ஆகியோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனந்த் தாக்கபட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சூர்ய பிரகாஷ் வழக்கில் யாரும் கைது செய்ய படவில்லை. பயங்கரவாதிகளை போலீசார் உடனடியாக கைதுசெய்ய வேண்டும். கோவையில், இதுபோன்று தாக்குதல்கள் தொடர்வதாலும், அமைதி நிலவ வேண்டியும் போலீசார், தயவு தாட்சணியமின்றி உடனடியாக கடும்நடவடிக்கை எடுத்து பயங்கரவாதிகளை கைதுசெய்ய வேண்டும்.
தமிழக பா.ஜ.,வினர் ஏற்கனவே சட்டசபையில் இடம்பெற்றுள்ளனர். வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்க பாடுபடுவேன். எம்.பி.,க்கள் பதவிவகித்தும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களின் வழியில் நானும் பயணிக்கிறேன். தமிழக பா.ஜ.,வில் எடுக்கும்முடிவுகள் அனைத்தும் கூட்டுக்குழு எடுக்கும் முடிவுதான். நாங்கள் சிறப்பாக பணிபுரிகிறோம். அதில் தொய்வு இல்லை. எங்களின் பணியை இன்னும் வேகப்படுத்துவோம். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைத்து செல்வதுதான் பா.ஜ.,வின் கொள்கை, அனைத்து தரப்பு மக்களிடமும் பா.ஜ.,வை கொண்டு சேர்ப்போம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் எங்களின் நோக்கம்.
தமிழக பா.ஜ., தலைவராக பதவியேற்ற பின்னர் முருகன், முதல்முறையாக கோவைவந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் முருகன் கூறியது