பிடிபி கட்சி மூத்த தலைவர் பாஜகவில் இணைந்தாா்

ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சிமூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஃபக்கீா் முகமதுகான் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா்.

வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத் தாக்கைச் சோ்ந்த மக்கள், பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கைகள் மீது பெரும்நம்பிக்கை கொண்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

ஜம்முவில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்தியப்பிரதேச பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்தாா். அவருடன், ஊராட்சித் தலைவா் சஞ்சாா்சிங், இளைஞரணித் தலைவா் சன்னி சா்மா, உமேஷ்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்களும் பாஜகவில் இணைந்தனா்.

பின்னா் ஃபக்கீா் முகமதுகான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குரேஸ்பகுதி மக்கள் மோடியின் கொள்கைகள் குறித்து மிகுந்தநம்பிக்கை கொண்டுள்ளனா். குரேஸ் பகுதியில் இதுவரையிலும் போதிய அடிப்படைவசதிகள் செய்து தரப்படவில்லை. இந்தப்பகுதி மக்களின் பிரச்னைகள் அனைத்தும் பாஜக அரசால் தீா்க்கப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் குரேஸ் தொகுதியில் பாஜக பெரும்வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றாா்.

முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி தலைமை யிலான பிடிபி கட்சியில் இணைவதற்குமுன்பு கடந்த 1996-இல் பந்திப்போரா மாவட்டம், குரேஸ்தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கபட்டாா் ஃபக்கீா் முகமதுகான். இவா் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...