நிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா?

தமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ஆக மெல்ல உயர்ந்திருந்தது.

இந்நிலையில்தான், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்,நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில்  அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

தமிழகத்தில்  மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது என்ற அவரது அந்தஅறிவிப்பு, ஏற்கெனவே கொரோனா பீதியின் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள பொது மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்துடன், புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள 50 பேரில், 45 பேர் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் என்றசெய்தி, பொதுமக்களுக்கு இடியாய் இறங்கியுள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,500 பேரில், 1,130 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களில் 515 பேர்மட்டுமே அடையாளம் காணப் பட்டுள்ளனர் என்ற சுகாதாரத்துறை செயலாளரின் தகவல் மக்களுக்கு இன்னொரு இடியாக இறங்கியுள்ளது.

இப்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒரேநாளில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்த மாநாடு குறித்தும், இந்த மாநாடு கொரோனா வைரஸ்பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஏற்படுத்தியுள்ள எதிர்மறை தாக்கம் குறித்தும் இங்கு காண்போம்…

மார்ச் 13: மதரீதியான சர்வதேசமாநாட்டுக்காக ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 3,400 பேர் டெல்ல நிஜாமுதீன் மார்கஸ் எனுமிடத்தில் ஒன்றாக கூடினர்.

மார்ச் 16: டெல்லியில் மார்ச் 31 ஆம் தேதிவரை மதரீதியான, சமூக நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக்கூடாதென டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவு

மார்ச் 20: டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தெலங்கானா சென்ற 10 இந்தோனேசியர்களுக்கு கொரோனா  உறுதி.

மார்ச் 22: பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தப்படி, கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிப்பு

மார்ச் 23: டெல்லி, மதரீதியான மாநாட்டில் பங்கேற்ற 1,500 பேர் மாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறினர்.

மார்ச் 24: பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிப்பு

மார்ச் 25: டெல்லிமாநாட்டில் பங்கேற்றவர்கள் 1,000 பேர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திலேயே முடக்கம்

மார்ச் 26: கொரோனா தொற்றுக்கு ஆளான மத போதகர் ஜம்மு -காஷ்மீர் மாநிலம்,ஸ்ரீநகரில் மரணம்.

மார்ச் 28: உலகசுகாதார நிறுவன அதிகாரிகள் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டு இடத்துக்கு வருகை. அவர்களின் பரிந்துரையின் பெயரில் அங்கு தங்கியிருந்த வர்களில் 33 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்..

மார்ச் 29: அரசின் எச்சரிக்கையையும்மீறி மாநாட்டு இடத்தில் தொடர்ந்து தங்கியிருந்த அனைவரும் டெல்லி போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தபட்டனர்.

மார்ச் 31: மதரீதியான மாநாட்டுக்கு ஏற்பாடுசெய்த அமைப்பின் நிர்வாகிகள் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைசேர்ந்த 50 பேர், டெல்லியை சேர்ந்த 24 பேர் உள்பட மொத்தம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 84 பேருக்கு தற்போது கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. மேலும், இந்தமாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த 824 பேர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், கொரோனா வைரசின் மூன்றாம் நிலையான சமூகபரவலுக்கு இம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் முக்கிய காரணமாக அமைந்துவிடுவார்களோ என்ற அச்சம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. மேலும் இதில் ஏதேனும் சதிவலைகள் பின்னப் பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...