இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல

டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம், காணொலி காட்சி வழியாக நடந்தது. இந்தகூட்டத்துக்கு தலைமை தாங்கிபேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசை தாக்கிப்பேசினார்.
அப்போது அவர், திட்டமிடாமல் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது, இந்தியாவில் உள்ள லட்சோபலட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வில் குழப்பத்தையும், வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஊரடங்கால் கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுவான குறைந்தபட்ச நிவாரண திட்டத்தை தயாரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
21 நாள் ஊரடங்கு பிரச்சினையை சோனியாகாந்தி அரசியலாக்கி இருப்பதற்கு பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதில் இந்தியாவின் முயற்சிகள் உள்நாட்டிலும், உலகளவிலும் பாராட்டப்படுகின்றன.
கொரோனா வைரசை வீழ்த்துவதில் நாட்டின் 130 கோடி மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். ஆனாலும்கூட, காங்கிரஸ் கட்சி அற்ப அரசியல் விளையாட்டு நடத்துகிறது. நாட்டுநலனை கருத்தில் கொண்டு, மக்களை தவறாக வழிநடத்துவதை அந்தகட்சி நிறுத்த வேண்டிய அவசரமான தருணம் இது. இவ்வாறு அமித் ஷா அதில் கூறி உள்ளார்.
சோனியா காந்தியின் விமர்சனத்துக்கு பாரதீய ஜனதா தலைவர் ஜேபி.நட்டாவும் டுவிட்டரில் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசுக்கு எதிரானபோரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் முயற்சிகள் உலகளவில் பாராட்டப்படுகின்றன. பிரதமர், அனைத்து மாநிலங்களுடன் சேர்ந்து ஒரேஅணியாக போராடுகிறார். கடினமான காலங்களில் காங்கிரஸ் கட்சி ஒருபொறுப்பான அரசியல் கட்சியாக செயல்பட வேண்டும்.
ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியின் தலைமையில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்று பட்டுள்ளது. அத்தகைய ஒருநேரத்தில் சோனியா காந்தி வெளியிட்டுள்ள கருத்து உணர்வற்றது, அநாகரீகமானது. இது அரசியல் செய்வதற்கான நேரமுமல்ல. தேசத்துக்காக ஒன்றுபட்டு செயல்படவேண்டிய தருணம் இது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...