இந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம உண்டு

இந்தியாவில் போதுமான அளவில் டெஸ்ட்கள் செய்யப்படவில்லை..அதனால்தான் சீன வைரஸ் தொற்று குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது என ஒரு கும்பல் கதறிக்கொண்டே இருந்தது..

அதாவது நிறையப்பேருக்கு சோதனை செய்தால் , பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயரும் என்று சொன்னார்கள்..ஆகா..மக்கள் நலனில்தான் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று தோன்றும்… அதெல்லாம் ஒன்றுமில்லை.. பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகமானால் , அதை வைத்து மத்திய , மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பை ஓட்டலாம் என்று அந்த நரிக்கும்பல் காத்துக் கிடந்தது …

லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின் 14 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டோம்.. சீன வைரசின் இன்குபேஷன் பீரியட் அதிகபட்சம் 14 நாட்கள் தான் ..

அதாவது ஒருவர் அதிகபட்ச நோய் எதிர்ப்புசக்தி உடையவராக இருந்தாலும் , அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் , அதிகபட்சம் 14 நாட்களுக்கு மேல் அவருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட்டே தீரும் …இருமல் , காய்ச்சல் , பின் மூச்சுத்திணறல் போன்றவை வரும்… முறையான மருத்துவம் கிடைக்காவிட்டால் அதிகபட்சம் 10 நாட்களுக்குள் , ஆள் காலி …

ஒருவேளை இந்த கூமுட்டைகளெல்லாம் சொல்வது போல எக்கச்சக்கமான மக்களுக்கு நோய்த்தொற்று இருந்திருந்தாலும் இந்த 14 நாட்களில் அனைத்துமே வெளிவந்திருக்கும் …யாரும் மறைக்க முடியாது …

டெல்லியில் நடைபெற்ற தனிநபர் மாநாடு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் , நோய்தொற்று மிகக் கணிசமான அளவில் குறைந்திருக்கும் என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.. டெஸ்ட் செய்தால் எண்ணிக்கை உயரும் என்றும் ஊளையிட்டுக் கொண்டிருந்த கும்பல் இப்போது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை…

இந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம சக்தி உண்டு ..அது எப்போதுமே இந்த தேசத்தைக் காத்து வருகிறது ..மொகலாயர்கள் ஆதிக்கத்தில் சிக்கித் திணறிய இந்த நாட்டை மீட்க ஒரு வீர சிவாஜியையும் விஜயநகர சாம்ராஜ்யத்தையும் கொடுத்தது…

பின்னர் வெள்ளையன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முதலில் பாலகங்காதர திலகரையும் , பின்னர் மகாத்மா காந்தியையும் இந்த தேசம் வழங்கியது. சுதந்திரத்துக்குப்பின் நேருவின் சொதப்பல்களைத் தவிர்க்க ஒரு வல்லப் பாய் பட்டேல் கிடைத்தார்…

இப்போதும் அப்படித்தான் ….மிக நெருக்கடியான கால கட்டத்தை இந்த நாடு கடக்கும் நேரத்தில் தேசத்தின் பிரதமராக திரு . நரேந்திர மோடி இருக்கிறார்… அவரும் இந்தப் பேரிடரை மிகச் சிறப்பாக கையாள்கிறார்…

மிக விரைவில் இந்த தேசம் நெருக்கடியிலிருந்து மீண்டு வரும்…

ஊளையிடுவோர் ஓரமாகப் போய்விடுங்கள்..

ஜெய்ஹிந்த் !

நன்றி சரவண குமார் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...