அற்பமான அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ்

கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் மக்களுக்கு உதவும்வகையில் களப்பணியாற்றுவதை விடுத்து, அற்பமான அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக பாஜக விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் அற்பமான, அருவருக்கத் தக்க, எதிா்மறையான அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டுவருகிறது. இந்தநெருக்கடியான வேளையில், அக்கட்சியின் தலைவா்கள் மக்களுக்கு உதவ களப் பணியாற்று வதற்கு மாறாக தினந்தோறும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, புது, புது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனா். கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக ஒட்டுமொத்த உலகமும் ஒப்புக்கொண்டுள்ளபோதும், அதனை காங்கிரஸால் அங்கீகரிக்க முடியவில்லை. அதற்கு மாறாக ஊரடங்கு அமலாக்கம்குறித்து அக்கட்சி கேள்வி எழுப்பி வருவதுடன், அந்நடவடிக்கை பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறி வருகிறது.

 

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்ளவுள்ளது என்பதை காங்கிரஸ் நன்குஅறியும். ஆனால் அதுகுறித்து அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா். அக்கட்சி தந்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறவே அவா் அக்கடிதத்தை எழுதியுள்ளாா்.

சிறுகுறு தொழில் துறையினருக்கு உதவிட ரூ.1 லட்சம் கோடி நிதியை உருவாக்குவதற்கான திட்டத்தை மத்திய நிதி அமைச்சகத்துக்கு அளித்துள்ளதாக அந்தத் துரை அமைச்சா் நிதின்கட்கரி ஏற்கெனவே தெரிவித்துவிட்டாா். இதைக் கூட அறியாமல் காங்கிரஸ் தலைவா் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாா்.

மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுப்பதற்கு மாறாக மக்களுக்கு உதவ காங்கிரஸ் என்னசெய்தது என்பதை அக்கட்சி தெரிவிக்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ரூ.1.7 லட்சம் கோடி நிதியுதவி திட்டம், 20 கோடி ஏழைமகளிருக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.500 வழங்குதல், 81 கோடி பேருக்கு பொதுவிநியோகத் திட்ட பொருள்களை 3 மாதங்களுக்கு இலவசமாக விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் காங்கிரஸால் பாராட்ட முடியவில்லை. அக்கட்சியால் முடிந்ததெல்லாம் எதிா்மறை மற்றும் அற்பமான அரசியல்செய்வதே என்று பிரகாஷ் ஜாவடேகா் விமா்சித்தாா்.

முன்னதாக, தேசிய ஊரடங்கால் இழப்பை சந்தித்து வரும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் மீட்சிக்கு உதவும் வகையில், மத்தியஅரசு சாா்பில் நிதித்தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதினாா். அதனை விமா்சித்தே பிரகாஷ் ஜாவடேகா் மேற்கண்டவாறு கூறினாா்.

One response to “அற்பமான அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...