பிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது

பிரதமர் நரேந்திரமோடி தனது தாயாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு விரைவில் புத்தகமாக வெளியாகவுள்ளது.

குஜராத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வரான நரேந்திர மோடி, சிறு வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பிறகுபாஜகவில் சேர்ந்தார். பின்னர், கட்சியில் பல்வேறு படிநிலைகளில் களப்பணியாற்றி பிற்காலத்தில் குஜராத் முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு, நாட்டின் பிரதமராக அவர் உயர்ந்துள்ளார்.

கட்சியில் இருக்கும் போது களப்பணிக்காக அவர் பல ஊர்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால் அவர் தனது தாயாருடன் சேர்ந்துவாழ்ந்த நாட்கள் மிகவும் குறைவு ஆகும். இதனிடையே, தனது இளமை காலத்தில் தினமும் தனது தாயார் ஹீராபென்னுக்கு கடிதம் எழுதுவதை மோடி வழக்கமாக வைத்திருந்தார். அவ்வாறு அனுப்பப் படும் கடிதங்களை சில மாதங்களுக்கு பிறகு அவரே கிழித்து விடுவாராம்.

இந்நிலையில், அவரது தாயாரின் இல்லத்தில் உள்ள ஒருடைரியில் பிரதமர் மோடியின் கண்களுக்கு படாமல் சில கடிதங்கள் இருந்திருக்கின்றன. தற்போது அந்த கடிதங்களை தொகுத்து புத்தகமாக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்தியில் இருக்கும் அந்தக் கடிதங்களை பிரபல பத்திரிகையாளர் பாவனா சோமையா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘லெட்டர்ஸ் டூ மதர்’ என்ற தலைப்பிலான அந்தப்புத்தகம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி கூறும்போது, “எனது எழுத்துகள் இலக்கிய ரீதியிலானது கிடையாது. ஆனால் எனது புரிதல்கள், எண்ணங்கள் ஆகியவற்றை எந்தவித தணிக்கையும் செய்யாமல்இந்தக் கடிதங்கள் பிரதிபலிக்கும். நான் எழுத்தாளன் இல்லை. என்னைப் போலவே பெரும்பாலானோர் எழுத்தாளர்கள் கிடையாது. ஆனால், உணர்வை வெளிப்படுத்தும் ஆவல் எல்லோருக்கும் இருக்கும். உணர்வுகளை அடக்கி வைக்கும் போது ஒரு நேரத்தில் அவைவெளிபட்டே ஆகும். அவற்றையே எழுத்துகள் மூலமாக நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...