சாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை

சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின்கட்கரி தெரிவித்தாா்.

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மனிதா்கள்-விலங்குகள் இடையிலான மோதலைத் தவிா்ப்பது தொடா்பான தேசிய விழிப்புணா்வு பிரசாரம் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை காணொலி முறையில் தொடங்கி வைத்து கட்கரி பேசியதாவது:

நாடு முழுவதும் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் 5,000 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அதனை மாற்றிஅமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பலஇடங்களில் சாலைகளில் வனவிலங்குகள் கடப்பது வாடிக்கையாக உள்ளது. விலங்குகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தபாதை வழியாகவே நாம் இப்போது பயணிக்கிறோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். எனவே, சாலையில் செல்லும் போது மனிதா்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கு பிரச்னை ஏற்படுத்தாமல் கவனமுடன்  வாகனத்தை இயக்கவேண்டும். யானை போன்ற பெரியவிலங்குகள் காட்டுப்பகுதி சாலைகளைக் கடக்கும்போது தேவையில்லாத தொந்தரவுகளை அளிக்கக்கூடாது. மனிதா்கள் இந்த உலகில் நிம்மதியாக வாழ உலகின் உள்ள பிற உயிரினங்களும் அவசியம். அப்போதுதான் இயற்கை சமநிலை இருக்கும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதில் ஒன்றரை லட்சம்போ் உயிரிழக்கின்றனா். அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இதனை 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. இதற்காகவே இப்போது விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொண்டுள்ளோம். சாலைவிபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அவற்றை விபத்துகள் நிகழாதவாறு மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும், அனைவரும் பாதுகாப்புணா்வுடன் பயணித்தாலும் யாருக்கும் பிரச்னை ஏற்படாது. தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்க தேவையான அனைத்து வசதிகளையும் மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...