அவசரக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள்

அவசரக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஒரேநாளில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மிக மிக அதிக எண்ணிக்கையில் தொற்றுதினமும் அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,08,993 ஆக இந்தியாவில் உயர்ந்து உள்ளது என்று சுகாதாரஅமைச்சின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோவால் இது வரை 8,928 பேர் உயிரிழந்துள்ளனர். 1,46,880 பேர் நாடுமுழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கோவிட் -19 என்ற கொரோனா தொற்று நோய்க்கு எதிராக நாட்டில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மறு ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தார் என்று மத்தியஅரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ்தொற்றுகள் அதிகரித்து வரும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிலைமை குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் விவாதித்தார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் என்.ஐ.டி.ஐ ஆயோக் உறுப்பினரும் மருத்துவ அவசர நிலை மேலாண்மை திட்டத்தின் கன்வீனருமான வினோத்பால் கொரோனா பாதிப்பு குறித்து விவரித்துள்ளார். மூன்றில் இரண்டுபங்கு ஐந்து மாநிலங்களில் உள்ளது எனறும் பெரிய நகரங்களில் அதிக எண்ணிக் கையிலான கொரோனா இருப்பதையும் விவரித்துள்ளார்.

அப்போது, நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் மருத்துவமனை மற்றும் தனிமை படுத்தப்பட்ட படுக்கைகளின் தேவைகள் குறித்து அரசின் குழுவின் பரிந்துரைகளை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துக்கொண்டார், மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதரத் துறையுடன் கலந்தாலோசித்து அவசரகால திட்டங்களை செய்யுமாறும் சுகாதார அமைச்சக அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பருவமழை நெருங்கிவருவதால் முறையான தயாரிப்பை உறுதிசெய்யுமாறு சுகாதார அமைச்சகத்தை பிரதமர் மோடி கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். டெல்லியில் கொரோனா பரவும் நிலைமை பற்றி விவாதிக்கப் பட்டது மற்றும் இரண்டு மாதங்களுக்கான கணிப்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷ மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி லெப்டினன்ட் கவர்னர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து மூத்த அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி பரிந்துரைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...