மகாராஷ்டிரத்தில் கரோனா உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் தவறான நிா்வாகமே பொறுப்பாகும்

கரோனா நோய் தொற்றைக் கட்டுப் படுத்துவதில் கேரள அரசை மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாராஷ்டிர விகாஸ்ஆகாடி அரசு பின்பற்ற வில்லை என்று பாஜக மூத்த தலைவா் ஆஷிஷ்ஷெலா் குற்றம் சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், தாணே நகரில் இருந்து காணொலி முறையில் செய்தியாளா்களுக்கு திங்கள் கிழமை பேட்டியளித்தவா், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசின் முதலாம் ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் அதிகரிப்பதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் தவறானநிா்வாகமே பொறுப்பாகும்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் கேரள அரசின் வழிமுறைகளை மகாராஷ்டிரத்தில் உத்தவ்தாக்கரே தலைமையிலான அரசு பின்பற்றியிருந்தால், அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

மகாராஷ்டிரத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கமுடியாது. இந்த மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.28,104 கோடி நிதியுதவி வழங்கியது. ஆனால், அந்ததொகை முழுவதும் எங்கே சென்றது என்று யாருக்கும் தெரியாது.

மும்பையில் கரோனா தொற்றுபரவல் அதிகரித்ததால், மாநகராட்சி ஆணையா் பிரவீண் பா்தேசி உடனடியாக மாற்றப்பட்டாா். அதேபோல், தாணே மாவட்டத்தில் கரோனாபரவல் அதிகரித்துள்ளதால், அந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக பதவி வகிக்கும் சிவசேனையின் மூத்த தலைவரும், நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்கரே மாற்றவேண்டும் என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...