சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடன் அளிக்க ஒப்புதல்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இது வரை ரூ.1,14,502 கோடி கடன் அளிக்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:

ஜூலை 4-ம் தேதி நிலவரப்படி பொது துறை மற்றும் தனியாா்வங்கிகள் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதில் ரூ.56,091.81 கோடிகடன் அளிக்கப்பட்டுவிட்டது.

பொதுத்துறை வங்கிகள் ரூ.65,863.63 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து அதில் ரூ.35,576.48 கோடிகடன் அளித்து விட்டன. தனியாா் வங்கிகள் ரூ.48,638.96 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து, அதில் ரூ.20,515.70 கோடிகடன் அளித்துள்ளன.

அதிகபட்சமாக முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.20,628 கோடிகடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப்நேஷனல் வங்கி ரூ.8,689 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.3,605 கோடி கடன் பெற்றுள்ளன. இதற்கு அடுத்து தமிழ்நாட்டைச் சோ்ந்த நிறுவனங்கள் ரூ.3,871 கோடி கடன் பெற்றுள்ளன. ரூ.6,616 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...