சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடன் அளிக்க ஒப்புதல்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இது வரை ரூ.1,14,502 கோடி கடன் அளிக்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:

ஜூலை 4-ம் தேதி நிலவரப்படி பொது துறை மற்றும் தனியாா்வங்கிகள் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதில் ரூ.56,091.81 கோடிகடன் அளிக்கப்பட்டுவிட்டது.

பொதுத்துறை வங்கிகள் ரூ.65,863.63 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து அதில் ரூ.35,576.48 கோடிகடன் அளித்து விட்டன. தனியாா் வங்கிகள் ரூ.48,638.96 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து, அதில் ரூ.20,515.70 கோடிகடன் அளித்துள்ளன.

அதிகபட்சமாக முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.20,628 கோடிகடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப்நேஷனல் வங்கி ரூ.8,689 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.3,605 கோடி கடன் பெற்றுள்ளன. இதற்கு அடுத்து தமிழ்நாட்டைச் சோ்ந்த நிறுவனங்கள் ரூ.3,871 கோடி கடன் பெற்றுள்ளன. ரூ.6,616 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.