முடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு

இந்தியமருந்து நிறுவனங்களின் மதிப்பை கொரோனா பாதிப்பு உலகம் அறியச் செய்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் வாய்ப்புகள் ஏராளம்உள்ளன. இதனை உலக நாடுகள் பயன்படுத்திக் கொள்ளளவேண்டும்.

முடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு. உலக நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியா தன்னை சீர்திருத்திக்கொண்டு, சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டும் இருக்கிறது.

கடந்த 6 ஆண்டுகளில் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. குறிப்பாக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவைவரியாக மாற்றியது, வர்த்தகம் தொடங்கு வதற்கான வழிகளை எளிமைப் படுத்தியது, உட்கட்டமைப்பை மேம்படுத்தியது என்பவை அவற்றுள் சில.

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் உலகத்திற்கு இந்தியமருந்து நிறுவனங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்துள்ளது.

“எதைச் செய்ய முடியாது என்று நினைக்கிறோமோ அதை துணிந்து செய்து முடிக்கும் மனப்போக்கும் தன்னம்பிக்கையும் இந்தியர்களிடத்தில் எப்போதுமே இருக்கும். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை. பொருளாதாரவளர்ச்சி மேம்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இதுபோன்ற நெருக்கடியான சமயத்தில் உலகநாடுகள் கொரோனாவுடன் போராடி வரும் நிலையில், இந்தியா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது”

உலக நாடுகளிலேயே இந்தியாதான் மிகவும் திறந்த நிலைப் பொருளாதாரமாக உள்ளது  உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடுசெய்ய சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.

இந்தியா குளோபல் வீக் 2020 என்ற வீடியோ கான்பரன்சிங் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து  பேசியது-

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...