மத்திய அரசின் உதவிகள் இடைத் தரகா் தலையீடு இன்றி ஏழைகளை சென்றடைகிறது

மத்திய அரசின் உதவிகள் இடைத் தரகா்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக ஏழைமக்களைச் சென்றடைகிறது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினாா்.

திருப்பூா் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் இந்தியசுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோனின் 263ஆவது குருபூஜை சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதில், அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பின் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனாவில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டத்தை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். மத்திய அரசின் உதவிகள் இடைத்தரகா்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக ஏழைமக்களை சென்றடைகிறது. ஏழைமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 3 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 அவா்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில்கள் அழிவை சந்தித்துள்ளது என கம்யூனிஸ்ட் கட்சியினா் குற்றம்சாட்டினா். ஆனால் மத்திய அரசோ வங்கிகளுக்கு உத்தரவாதத்தை அளித்து கடன்பெற்றிருந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் கடன்வழங்க நடவடிக்கை மேற்கொண்டது.

நாடு முழுவதும் சிறு, குறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம்கோடியை பிரதமா் மோடி ஒதுக்கீடு செய்துள்ளாா். அதேபோல விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாய கடனும் எளிமையாக்க பட்டுள்ளது.

கடந்த ஒருமாதத்தில் மட்டும் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.65 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கும் தேவையான நிதிகளை மத்திய அரசு விடுவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் எதைக்கொடுத்தாலும் எதிா்க் கட்சிகள் குறை சொல்லி வருகின்றனா் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...