மத்திய அரசின் உதவிகள் இடைத் தரகா் தலையீடு இன்றி ஏழைகளை சென்றடைகிறது

மத்திய அரசின் உதவிகள் இடைத் தரகா்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக ஏழைமக்களைச் சென்றடைகிறது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினாா்.

திருப்பூா் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் இந்தியசுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோனின் 263ஆவது குருபூஜை சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதில், அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பின் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனாவில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டத்தை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். மத்திய அரசின் உதவிகள் இடைத்தரகா்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக ஏழைமக்களை சென்றடைகிறது. ஏழைமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 3 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 அவா்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில்கள் அழிவை சந்தித்துள்ளது என கம்யூனிஸ்ட் கட்சியினா் குற்றம்சாட்டினா். ஆனால் மத்திய அரசோ வங்கிகளுக்கு உத்தரவாதத்தை அளித்து கடன்பெற்றிருந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் கடன்வழங்க நடவடிக்கை மேற்கொண்டது.

நாடு முழுவதும் சிறு, குறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம்கோடியை பிரதமா் மோடி ஒதுக்கீடு செய்துள்ளாா். அதேபோல விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாய கடனும் எளிமையாக்க பட்டுள்ளது.

கடந்த ஒருமாதத்தில் மட்டும் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.65 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கும் தேவையான நிதிகளை மத்திய அரசு விடுவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் எதைக்கொடுத்தாலும் எதிா்க் கட்சிகள் குறை சொல்லி வருகின்றனா் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...