ராமர் கோயிலின் கட்டுமானம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

அயோத்தியில், ராமர் கோயிலின் (Ram Temple) கட்டுமானம் அடுத்தமாதம் துவங்க வாய்ப்புள்ளது. அதற்கான “பூமிபூஜை” (Bhoomi Pooja) நடத்த பிரதமர் நரேந்திர (Prime Miniser) மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக் கிழமை நடைபெறவிருக்கும் ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா (Shri Ram Janmabhoomi Teerth Kshetra) அறக்கட்டளையின் கூட்டத்தில் கோயில் கட்டுமானத்திற்கான தற்காலிகதிட்டம் முடிவு செய்யப்படலாம் என்று சம்பந்தப்பட்ட ஆதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அறக்கட்டளையின் தலைவர் நிருத்யாகோபால் தாஸ் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி, ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டுவிழாவின் போது, கோயிலுக்கான பூமி பூஜையை செய்யவருமாறு அவரை அழைத்துள்ளார்” என்று அறக்கட்டளை தலைவரின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நயன்தாஸ் தெரிவித்தார்.

எனினும், இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கலந்துகொள்வாரா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஜூலை 18 கூட்டத்திற்கு பிறகு இதுதெளிவாகலாம் என்றும் அவர் கூறினார்.

பூமி பூஜையின்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளரும் கோயில் அறக்கட்டளையின் கட்டுமான குழுவின் தலைவருமான நிருபேந்திரமிஸ்ரா வியாழக்கிழமை அயோத்திக்கு சென்றார். அவருடன் ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் பாதுகாப்பு ஆலோசகரும் பிஎஸ்எஃப்-ன் முன்னாள் இயக்குனருமான ஜெனரல் கே.கே.ஷர்மா உடனிருந்தார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி அமைக்கப்பட்ட ராமர்கோயில் அறக்கட்டளையின் பல்வேறு உறுப்பினர்களை இவர்கள் சந்தித்தனர்.

இங்குள்ள சர்க்யூட் ஹவுஸில் உள்ளூர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அறக்கட்டளை செயலாளர் சம்பத்ராய் மற்றும் உறுப்பினர்கள் அனில் மிஸ்ரா மற்றும் பிம்லேந்திர மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில் அயோத்தி (Ayodhya) பாஜக எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, ராமர் கோயில் கட்டுமானத்தை துவக்கிவைக்க பிரதமரை அயோத்திக்கு அழைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...