தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் தனிமருத்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், நேற்று 7ஆவது முறையாக, பிரதமர் நரேந்திரமோடி தேசியக் கொடி ஏற்றிவைத்தார். பின்னர் பேசிய அவர், டிஜிட்டல் இந்தியாவோடு அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில், அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்கும் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க், அடுத்த ஆயிரம்நாட்களில் 6 லட்சம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.
இந்தியாவில் விஞ்ஞானிகள் 3 கொரோனா தடுப்பூசிகளை ஆய்வுசெய்து வருவதாகவும், அந்த ஆய்வுகள் வெவ்வேறு நிலையில் இருப்பதாகவும் மோடி கூறினார். தடுப்பூசி தயாரானவுடன் அதை அனைவருக்கும் குறுகியகாலத்தில் கொண்டு சேர்க்க திட்டம் தயாராக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சுகாதார முறைகளை புரட்சிகரமாக மாற்றும், தேசிய டிஜிட்டல் சுகாதாரதிட்டம் என்ற புதிய திட்டத்தையும் அவர் அறிவித்தார். இதன் படி, ஹெல்த் ஐடி என்ற பெயரில், ஒவ்வொருவருக்கும் மருத்துவ அடையாள அட்டைவழங்கப்படும் என்றும், அதில் நோய் பாதிப்பு, எடுத்துக்கொண்ட மருந்துகள், எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறப்பட்டது என்பன உள்ளிட்ட மருத்துவ விவரங்கள் அனைத்தும் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |