எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்

அருண் ஜெட்லியின் நினைவுதினமான இன்று ”எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் நிதியமைச்சரான அருண்ஜெட்லியின் நினைவு நாளான இன்று, தனது வருத்தத்தை பகிர்ந்திருக்கும் பிரதமர் , அருண்ஜெட்லி குறித்து அவர் பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய உரையையும், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்திருப்பதுடன், எனதுநண்பரின் இழப்பால் வாடுகிறேன். இந்தியாவுக்கு மிகுந்த ஊக்கத்துடன் சேவையாற்றிய அவர், நுண்ணறிவாளர், சிறந்தபண்பாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு தங்களின் மரியாதையைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் பாஜக அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை இழந்தது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைந்தார். உடல்நிலை குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்த அருண் ஜெட்லி, அடுத்த மூன்று வாரங்களில் உடல் உறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.