சமூகஊடகம் மட்டுமல்ல நாட்டுமக்களே இவர்களை நிராகரித்து விட்டனர்

பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியத்தலைமை ஆளும் பாஜகவுடன் உள்கையாகச் செயல்படுகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக உரக்கப் பேசி வருகிறது.

நேற்றும் அதன் செய்தித்தொடர்பாளர் கேரா, பேஸ்புக் மட்டுமல்ல வாட்ஸ் அப் குழுமமும் ஆளும் பாஜகவுக்கு நெருக்கம் என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார், அதனால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக தலைவர்களின் வெறுப்பு உமிழும்பேச்சுகளை சமூக ஊடகங்களில் நீக்காமல் அதனை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் சாடி வருகிறது.

இதுதொடர்பாக ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஸூக்கர்பர்க்குக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் ராகுல்காந்தியைத் தாக்கிப் பேசினார் பாஜக ஐடிப் பிரிவு தலைவர் அமித்மால்வியா, “அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளுக்கு காங்கிரஸும் ராகுல்காந்தியும் தங்களைத் தவிர பிறர்தான்காரணம் என கூறிவருகின்றனர்.

அவர்களுக்கு என்ன புரியவில்லை எனில், காங்கிரஸ்கட்சியை மக்கள் ஆதரிக்கவில்லை, ராகுல் காந்தியின் தொலை நோக்கற்ற தலைமையையும் மக்கள் விரும்பவில்லை என்பதே.

எனவே ஏதோ சமூகஊடகம் மட்டுமல்ல நாட்டுமக்களே இவர்களை நிராகரித்து விட்டனர்.

இந்த நாட்களில் காங்கிரஸின் மனீத் வாரி முதல் கே.சி.வேணுகோபால் வரை சமூக ஊடகங்களுக்கு கடிதம் எழுதத் தொடங்கி விட்டனர்.

2019 தேர்தலின் போது இவர்கள்தான் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுடன் தொடர்புவைத்துக் கொண்டிருந்தனர். எனவே யாரை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...