இவரைப் பார்த்துதான் நக்கல் அடிக்கிறார்கள்

முன்பெல்லாம் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதே அபூர்வமாக இருந்தது (தமிழ்நாட்டை பொறுத்தவரை இப்பொழுதும்தான்).. அப்படியே வந்தாலும் பெயரளவில் ஒரு graduate பட்டத்தை விலைக்கு வாங்கி போட்டுக்கொள்வார்கள்.

ஆனால் இன்று அண்ணாமலை போன்ற ஒரு 36 வயது இளைஞர் அரசியலுக்கு வருவதை தமிழ்நாடு தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருக்க வேண்டும்.. ஏன்? முதலில் இந்த மனிதர் IIM ல் முடித்தவர்.. முதலில் IIM இல் நுழைய 1 லட்சம் பேர் CAT பரீட்சை எழுதுகிறார்கள் என்றால் முதல் ஆயிரம்பேருக்கு மட்டுமே இடம் கிடைக்கும்.. அதில் சிலர்முடிக்க முடியாமல் dropout செய்துவிடுவார்கள்… இவர் நேராக ஒரு கார்ப்பரேட் வேலைக்கு போயிருந்தால் இன்று குறைந்தபட்சம் மாதம் 5 லட்சம் சம்பாதித்துக்கொண்டிருப்பார்.. ஆனால் அதைவிட்டுவிட்டு civil service படிக்கச்சென்றது என்பதே பெரிய விஷயம்..

IIM ல் படித்தவர்களுக்கு நிர்வாகத்திறன் என்பது சர்வசாதாரணமாக இருக்கும்.. அதோடு இந்த மனிதருக்கு public service அனுபவமும் கலந்திருக்கிறது மிகப்பெரிய பிளஸ்.. வயதோ வெறும் 36 . இந்தவயதில் இப்படி உயர்பதவியிலிருந்து விலகி, கார்ப்பரேட் வேலை வேண்டாம் என்று விலகி பொதுச்சேவைக்கு வருவதை தமிழ்நாடே கொண்டாடி இருக்கவேண்டும்.. இந்த பையனுக்கு இப்பொழுது கார்ப்பரேட் வேலைக்கு போனாலும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும்.. ஆனால் இங்கே என்ன நடக்கிறது? இவரைப் பார்த்துதான் நக்கல் அடிக்கிறார்கள்…ஏன், எதனால்?

ஏனென்றால் இவர்களுக்கு கையில் இருக்கும் ஒரே ஆயுதம் troll மட்டும்தான்.. இவரை பார்ப்பனன் என்று திட்ட முடியாது… முட்டாள் என்று சொல்லமுடியாது (IPS படித்தவன் முட்டாள் என்றால் இவர்களெல்லாம் என்னவாம்?) இவர் மீதுள்ள clean image , அதேபோல கர்நாடக மக்களால் சிங்கம் என்று போற்றப்பட்ட heroic image ஐ காலி செய்யவேண்டும்.. அதற்க்கு கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு ஏதாவது சின்ன தப்பு செய்வாரா என்று பார்த்து , கிண்டல், கேலி பேசவேண்டும்.. இதில் அறிவாளித்தனம் எதுவும் இல்லை.. பொறாமை என்பது தெளிவாக தெரிகிறது.
கெட்டவர்களை ஒருவழி செய்வது என்கிற முடிவோடுதான் வந்திருக்கிறார் என்பது அவர் பேசும் தெளிவான பேச்சுக்களில் தெரிகிறது..

இனி இந்த தீப்பொறி மஹா அக்னியாக உருவெடுத்து தீயவர்களை பஸ்பம் ஆக்கட்டும்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...