மக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்

பிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் சிறியதாக வைக்கக்கூடாது. இதுவே அவருடைய பயணத்தின் உள்ளார்ந்த அம்சமமாகும்.

அவரது மக்கள் பணி 18 ஆண்டுகள் 11 மாதங்கள் என தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பேரழிவு பூகம்பத்தில் இருந்து அவசரமாக மீட்டெடுக்கும் பொறுப்புடன் குஜராத் மாநில முதல் மந்திரி பதவியில் அமர்ந்தவர். பேரிடரில் இருந்து மீட்டு, தனதுமாநிலத்தின் பழைய தோற்றத்தை உறுதிசெய்தார். மக்களால், மக்களுக்காக மக்களின் முதல்மந்திரியாக நரேந்திர மோடி பதவியேற்று ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களை மிகவும்சிறப்பாக பயன்படுத்தினார்.

‘ஷாலா பிரவேசோத்சவ்’ என்ற திட்டத்தின் மூலம் பெண்குழந்தைகள் உள்பட தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியோடு பெற்றோர் பள்ளியில் சேர்த்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது புதியகல்வி கொள்கைக்கு பரவலாக பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. மக்களின் சுமுக வாழ்க்கைக்கும், எளிதான தொழில் நடவடிக்கைகளுக்கும் தேவையான ஒவ்வொரு முயற்சிகளையும் எடுத்த ஒரேபிரதமர் நரேந்திர மோடி தான்.

11 கோடி குடும்பங்களுக்கு கழிப்பறைகட்டி கொடுப்பதில் கவனம் செலுத்திய வேளையில், நாட்டிலேயே முதல் முறையாக மாதவிடாய் சுகாதார நெறிமுறைகளை உருவாக்குவதில் அவருடைய அரசு கூடுதலாக அர்ப்பணித்துக் கொண்டது. நமது மக்களின் திறன்களுக்காக தனியாக ஒருஅமைச்சகத்தை உருவாக்கினார். பணம் இல்லாமல் தங்களுடைய கனவுகளை மெய்ப்பிக்க முடியாமல் போனவர்கள் எளிதாக கடன் உதவி பெறுவதற்காக முத்ராகடன் உதவி திட்டத்தை கொண்டு வந்தார். ஏழைகளும் உயர்சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக 10 கோடி ஏழை குடும்பங்கள் மருத்துவ காப்பீட்டுக்குள் வருகிறார்கள்.

‘மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஆணை நம்மிடம் ஒப்படைக்க பட்டுள்ளது. நம்முடைய முயற்சிகளை மேம்படுத்துவதன் மூலம் நாம் அதற்கு நீதி அளிக்க முடியுமா?’ என்று அடிக்கடி சொல்லுவார். இது தான் மோடி அரசியலின் சிறப்பம்சமாகும். அந்தவைராக்கியம் இருந்ததால்தான் கடந்த 6 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் நினைவு கூரத்தக்க மாற்றங்களை இந்தியா காண நரேந்திர மோடி உதவி புரிந்திருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளால் குறைகூறியவர்கள் கூட தற்போது அவற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திரமோடி தன்னுடைய 70 ஆண்டு கால நோக்கங்களை நிறைவேற்றுவதால், புதியஇந்தியா வளைந்து கொடுக்கக்கூடிய, அர்த்தம் உள்ள, நியாயமான மற்றும் ஒளிமயமானதாக இருக்கும் என்று ஒருவரால் கற்பனைசெய்ய முடியும். அந்த மாற்றத்தை நிர்வாக ரீதியாக நரேந்திர மோடியால் மட்டுமே கொண்டு வர முடியும்.

 

One response to “மக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...